என்கவுண்டர்: நீதி விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு! ஆந்திர அரசுக்கு சிக்கல்
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக் கொலை செய்த விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
ஆந்திராவில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி திருவண்ணாமலையை சேர்ந்த சேகர், தர்மபுரியை சேர்ந்த பாலச்சந்திரன் ஆகியோர், இன்று வாக்குமூலம் அளித்தனர்.

இவர்களை மதுரையை சேர்ந்த பீப்பிள் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு பாதுகாத்து வருகிறது. இதனிடையே மற்றொரு சாட்சியான ஜவ்வாது மலை பகுதியை சேர்ந்த இளங்கோ, அடையாள அட்டை பிரச்சினை காரணமாக செல்லவில்லை. இவர் ஆந்திர போலீஸ் மீதான அச்சத்தின் காரணமாகவும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில், இம்மூவரின் சாட்சியம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணைக்கு பிறகு மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவரான நீதிபதி முருகேசன் அளித்த பேட்டி:
சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் முழு விவரத்தை வெளியில் சொல்ல முடியாது. அதேநேரம், மூன்றாவது சாட்சியான இளங்கோ டெல்லி வராத நிலையில், அவரின் சொந்த ஊருக்கே சென்று விசாரிக்க ஒரு அதிகாரியை அனுப்பி வைக்க உள்ளோம்.
சாட்சிகள் மூவருமே தங்களது உயிருக்கு, ஆந்திர போலீசாரால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று பயப்படுகின்றனர். எனவே, மூவருக்கும், உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக போலீஸ் டிஜிபிக்கு உத்தரவி்ட்டுள்ளோம். சாட்சியங்கள் டெல்லிக்கு வருவதற்கு, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள் உதவி செய்துள்ளனர். எனவே, அவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளோம்.
இந்த சம்பவம் குறித்து ஜுடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளோம். மேலும், என்கவுண்டரில் ஈடுபட்ட போலீசார், வனத்துறையினரின் பெயர் பட்டியலை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டுள்ளோம். பெயர் பட்டியலில் எந்த விதமாற்றமோ, திருத்தமோ செய்ய கூடாது என்பதை ஆந்திராவுக்கு வலியுறுத்தியுள்ளோம்.
ஏப்ரல் 22ம்தேதிக்குள், ஆந்திர அரசு தனது பதில் மனுவை எங்களிடம் தாக்கல் செய்ய வேண்டும். அவர்களின் பதிலை பார்த்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆயினும், மேலோட்டமாக பார்க்கும்போது, இந்த 20 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறல் நடந்துள்ளது தெரிகிறது. ஆந்திராவின் அறிக்கையை பரிசீலித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நீதிபதி முருகேசன் கூறினார்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகளால் ஆந்திர அரசு விழிபிதுங்கியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications