சிபிஐ இயக்குநராக அனில்குமார் சின்ஹா நியமனம்
டெல்லி: சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய இயக்குநராக பீகார் மாநிலத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அனில் குமார் சின்ஹா புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் உயர்ந்த விசாரணை அமைப்பான சிபிஐயின் இயக்குநர் பதவி என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது அதன் இயக்குநராக அனில்குமார் சின்ஹா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவதால், புதிய இயக்குநரை தேர்வு செய்ய நேற்று இரவு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது.

இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் (தனிப்பெரும் கட்சி) மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூடி புதிய இயக்குநர் தேர்வு குறித்து விவாதித்தனர். அப்போது சுமார் 40 அதிகாரிகளின் பெயர்களை இக்குழு பரிசீலித்தது. இறுதியில் அனில்குமார் சின்ஹா பெயர் உறுதி செய்யப்பட்டது.
1979ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பிகாரில் பணியில் சேர்ந்த அனில் குமார் சின்ஹா, சிபிஐயின் சிறப்பு இயக்குநராக பதவி வகித்து வந்தார். சிபிஐ இயக்குநராகப் பதவியேற்கும் அவர், பதவியேற்ற நாளில் இருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இப்பதவியில் தொடருவார்.
டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ரஞ்சித் சின்ஹாவுக்கு செவ்வாய்க்கிழமை பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவர், சிபிஐ இயக்குநராக 2 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக 2ஜி, நிலக்கரிச் சுரங்க ஊழல்களில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2ஜி ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து விலகியிருக்கும்படி ரஞ்சித் சின்ஹாவுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications