கேரளாவில் மது பார்களை திறக்க லஞ்சம்: மேலும் ஒரு அமைச்சருக்கு 'சிக்கல்'
திருவனந்தபுரம்: கேரளாவில் மது பார்களைத் திறக்க ரூ10 கோடி லஞ்சம் கேட்டதாக கலால்துறை அமைச்சர் பாபு மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மூடப்பட்ட மது பார்களை மீண்டும் திறப்பதற்கு ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக கேரள மாநில நிதி அமைச்சராக இருந்த கேரள காங்கிரஸ் (எம்) தலைவரான கே.எம்.மானி மீது புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி மானிக்கு எதிராக விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற குரல் வெடித்தது. இதனால் மானி தமது பதவியை சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கேரள கலால் துறை அமைச்சர் கே.பாபு மீதும் தற்போது ரூ10 கோடி லஞ்ச குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மதுபார்களை மீண்டும் திறக்க அவர் ரூ.10 கோடி லஞ்சமாக பெற்றதாக கேரள மது பார் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பிஜூ ரமேஷ் கூறியுள்ளார்.
இந்த பிஜூ ரமேஷ்தான் மானியின் பதவிக்கு வேட்டு வைத்தவர்... தற்போது அமைச்சர் பாபு மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் பிஜூ ரமேஷ் கூறியுள்ளார். ஆனால் அமைச்சர் பாபு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மேலும் அமைச்சர் பாபு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தனும் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான முன்னணி பின்னடைவை சந்தித்த நிலையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் மீது லஞ்ச புகார் எழுந்திருப்பது அம்மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications