தீவிரவாதிகளை தீரத்தோடு தடுத்த ராணுவ வீரர் மனைவிகள்.. பெரும் அசம்பாவிதத்தை தடுத்தனர்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலின்போது, ராணுவ வீரர்கள் இருவரின் மனைவிகள் சமயோஜிதமாகவும், தைரியமாகவும் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் தீவிரவாதிகள் சிலர் ஜம்மு புறநகர் பகுதியான 'நக்ரோட்டா'வில் உள்ள ராணுவத்தின் 16வது படைப்பிரிவு முகாம் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
நேற்று காலை 5.30 மணிஅளவில் தீவிரவாதிகள் சிலர் போலீஸ் சீருடையில் முகாம் அருகே வந்தனர். அவர்கள் கையெறி குண்டுகளை வீசியதுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கிகளாலும் சுட்டனர்.

பிணை கைதிகள்
பின்னர் அப்பகுதியில் இருந்த 12 வீரர்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் என 16 பேரை அவர்கள் பணயக் கைதிகளாக பிடித்தும் வைத்துக் கொண்டனர். இதனால் ராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதில் முதலில் சற்று தாமதம் ஏற்பட்டது. எனினும், பின்னர் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

சண்டை முடிவு
தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக ராணுவ வீரர்கள் உள்பட 16 பேரை பிடித்து வைத்து இருந்ததால் அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் சாதுர்யமாகவும் அதே நேரம் வீரத்தோடும் செயல்பட்டனர். சுமார் 13 மணி நேரம் இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நீடித்தது. மாலை 6.30 மணி அளவில் சண்டை முடிவுக்கு வந்தது.

7பேர் வீர மரணம்
தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் இருவரும், வீரர்கள் 5 பேரும் வீர மரணம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பணயக் கைதிகளாக பிடிபட்ட அத்தனை பேரையும் ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர்.
இதனிடையே, ராணுவ வீரர்கள் குடும்பத்தோடு தங்கும் பகுதி அமைந்துள்ள குடியிருப்புக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபோது, கைக்குழந்தையை வைத்திருந்த இரு பெண்கள் அதை தடுத்துள்ளனர்.

பெண்கள்
வீடுகளிலிருந்த மேஜை, பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து வகை சமான்களையும் கதவுக்கு பின்னால் அடுக்கி வைத்து தீவிரவாதிகள் மேலும் முன்னேறாத வண்ணம் பார்த்துக் கொண்டனர். இதனால், குடியிருப்புக்குள் தீவிரவாதிகள் நுழைவது தவிர்க்கப்பட்டது. அல்லது பெண்கள், குழந்தைகள், அதிகாரிகள் என பலரையும் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருக்க வாய்ப்பு இருந்தது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications