அயோத்தி முழுவதும் துணை ராணுவம் குவிப்பு.. 20 தற்காலிக சிறைகள் அமைப்பு.. உச்ச கட்ட பரபரப்பு
Recommended Video
அயோத்தி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ள நிலையில் வகுப்புவாத அசம்பாவிதங்களை தடுக்க உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி தீர்ப்பின் போது எதற்கும் தயார் நிலையில் இருக்கும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் அயோத்தியின் அண்டை மாவட்டமான அம்பேத்கர் நகரில் 20 தற்காலிக சிறைகளை அமைத்துள்ளனர்.
இதற்காக இரண்டு மாவட்டங்களிலும் குறைந்தது 17 இண்டர்மீடியம் கல்லூரிகள், ஒரு பட்டப்படிப்பு கல்லூரி மற்றும் இரண்டு அரசு கட்டிடங்களை காவல்துறையினர் கையகப்படுத்தி உள்ளனர்.

கலவரங்களை தடுக்க
அயோத்தி எஸ்.எஸ்.பி ஆஷிஷ் திவாரி இதுபற்றி ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில் "அயோத்தி தீர்ப்புக்கு பின்னர் கும்பலாக ஏராளமானோர் வந்து குவிந்தால், அதுபோன்ற அவசரகால சூழ்நிலைகளில் இந்த சிறைகள் பயன்படுத்தப்படும். சர்ச்சைக்குரிய இடத்திற்கு அச்சுறுத்தல் மற்றும் நகரத்தில் உள்ள கோயில்களில் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கவும் கலவரங்களை சமாளிக்கவும் படைகள் தயாராக உள்ளன என்றார்.

போலீஸ் வழக்கு
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 5 ஆயிரம் பேர் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளோம். அதில் இரண்டாயிரம் பேருக்கு எதிராக தடை உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அயோத்தி எஸ்.எஸ்.பி ஆஷிஷ் திவாரி கூறினார்.

ராணுவம் குவிப்பு
இதனிடையே அயோத்தியில் ஏராளமான பாரா மிலிட்டரி படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மத்தியப்படைகள் தங்குவதற்கு 300 பள்ளிகளை போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். நகரம் முழுவதுமாக போலீஸ் மற்றும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒற்றுமைக்காக கூட்டம்
போலீசார் அயோத்தி நகர் முழுவதிலும் தினமும் மத நல்லிணக்க கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications