எச்சரித்தது போலவே பெங்களூரில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஐ.எஸ்.ஐ.எஸ்.?
பெங்களூர்: பெங்களூரில் இன்று இரவு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
உலக நாடுகளை மிரட்டுகிற தீவிரவாத இயக்கமாக உருவாகியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ், 'இஸ்லாமிய தேசம்" என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் தாக்குதல் நடத்துவோம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்திருந்தது.
One low intensity blast on Church Street. 2 injured, 1 serious. All requested to be alert & inform 100 if any unintended object found.
— M N Reddi, IPS (@CPBlr) December 28, 2014 இந்த நிலையில் இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியானது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பதில் @shamiwitness என்ற ட்விட்டர் கணக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் இந்த கணக்கை இயக்குவது பெங்களூரைச் சேர்ந்த மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்றும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மேதி, பெங்களூரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தான். இந்த தகவலைத் தொடர்ந்து மேதி பிஸ்வாஸை பெங்களூர் போலீசார் கைது செய்தனர். இதனிடையே மேதி பிஸ்வாஸின் கைதுக்கு பழிவாங்கும் வகையில் பெங்களூரைத் தகர்ப்போம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் மிரட்டல் விடுத்திருந்தது.
இந்த மிரட்டல் விடுக்கப்பட்ட 15 நாட்களுக்குள்ளேயே பெங்களூர் நகரத்தில் இன்று இரவு குண்டுவெடித்துள்ளது. இதனால் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகளே காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பெங்களூர் நகரம் முழுவதும் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2005-ல் இதே டிச.28ல் பெங்களூரில் தாக்குதல்
பெங்களூர் நகரில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதியன்று இரவு 7 மணியளவில் இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் டெல்லி ஐஐடி பேராசிரியர் முனீஸ் சந்திராப் பூரி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் வளாகத்துக்குள் நுழைந்த 2 தீவிரவாதிகளே இத்தாக்குதலை நடத்தியிருந்தனர். 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இத்தாக்குதல் நடைபெற்ற அதே நாளில் பெங்களூரில் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications