வன்முறை... பெங்களூரு ஐடி நிறுவனங்களுக்கு ரூ. 25,000 கோடி நஷ்டமாம்.. "ஷாக்" தகவல்!
பெங்களூரு: பெங்களூரில் நடந்த வன்முறையால் 2 நாட்களாக ஐடி நிறுவனங்களை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் தற்போது இந்த வன்முறை காரணமாக ஐடி நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அசோசம் தெரிவித்துள்ளது.
இது உத்தேச கணிப்புதான். இதை விட கூடுதலாகவும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அசோசம் கூறியுள்ளது. இந்த இழப்பை ஐடி நிறுவனங்கள் எப்படி சமாளிக்கப் போகின்றன என்று தெரியவில்லை அதேசமயம், இப்படியே அடிக்கடி பந்த், வன்முறை என்று தொடர்ந்தால் ஐடி நிறுவனங்கள், பெங்களூரை விட்டு இடம் பெயரும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெங்களூருதான் இந்தியாவின் ஐடி தலைநகராக விளங்குகிறது. இங்கு இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, எம்பசிஸ், ஆரக்கிள், டெல் என பல ஐடி நிறுவனங்கள், இ காம் நிறுவனங்கள் நிரம்பியுள்ளன. பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் இங்கு கடை விரித்துள்ளன. ஆனால் அத்தனை நிறுவனங்களம் காவிரிப் பிரச்சினையால் கலங்கிப் போய் நிற்கின்றன.
இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் நான்கு நாட்களுக்கு ஐடி நிறுவனங்களின் பணிகள் முற்றாக முடங்கிப் போயின. சம்பந்தமே இல்லாமல் செப்டம்பர் 2ம் தேதி நடந்த தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக்கிலும் ஐடி நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு மூட வைக்கப்பட்டன.
இப்படி அடிக்கடி பந்த், போராட்டம், வன்முறை என இந்த மாதத்தில் பலத்த சோதனைகளைச் சந்தித்து விட்டன ஐடி நிறுவனங்கள். இதுகுறித்து அசோசம் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கர்நாடகத்தில் ஐடி துறை மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. இதில் பெங்களூருதான் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 22,000 கோடி முதல் ரூ. 25,000 கோடி வரையிலான இழப்பை பெங்களூரு சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உத்தேச தொகைதான். இதை விடவும் அதிகம் இருக்க வாய்ப்புண்டு என்று அசோசம் கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications