பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ஜக்தர்சிங் தாய்லாந்தில் கைது!
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளியான ஜக்தர்சிங் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார். சண்டிகர் சிறையில் இருந்து 2004ஆம் ஆண்டு சுரங்கம் தோண்டி தப்பி ஓடி பரப்பை ஏற்படுத்தியவர்தான் இந்த ஜக்தர்சிங்.
பஞ்சாப் முதல்வராக இருந்த பியாந்த்சிங் 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி சண்டிகரில் தலைமைச் செயலக வளாகத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் 17 பேர் உயிரிழந்தனர்.

இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை காலிஸ்தான் விடுதலைப் படை என்ற அமைப்பு நடத்தியது. திலாவர்சிங் என்பவர் தற்கொலைதாரியாக பியாந்த்சிங் காரின் மீது தாக்குதல் நடத்தியதும் பின்னர் தெரியவந்தது. இந்த வழக்கில் மற்றொரு தற்கொலைதாரியாக தயாராக இருந்த பல்வந்த்சிங் ரஜோனா கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் பஞ்சாப் மாநில அரசின் நெருக்கடியால் மத்திய அரசு இடைக்கால தடை விதித்திருக்கிறது.
இப்படுகொலை சதித்திட்டத்தில் சூத்திரதாரியான ஜக்தர்சிங்கும் கைது செய்யப்பட்டு சண்டிகரில் உள்ள புரைல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது காலிஸ்தான் விடுதலைப் படை இயக்கத்தில் ஜக்தர்சிங் இருந்தார். பின்னர் காலிஸ்தான் புலிப் படை என்ற இயக்கத்தை உருவாக்கினார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சிறைக்குள்ளே கைகளாலேயே 90 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி அதன் வழியாக ஜக்தர்சிங், பரம்ஜித்சிங், தேவ் சிங் ஆகிய கைதிகள் சிறையில் இருந்து தப்பினர். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறையில் இருந்து தப்பி பாகிஸ்தானுக்கு சென்ற ஜக்தர்சிங் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உதவியுடன் கடந்த சில ஆண்டுகாலமாக தாய்லாந்தில் பதுங்கி இருந்தார்.
ஜக்தர்சிங் பதுங்கி இருக்கும் தகவல் தாய்லாந்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட அந்நாட்டு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஜக்தர்சிங் தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications