உ.பி. பிச்சைக்காரர்கள் அதிரடி... 50 பைசாவை போல் உள்ள ரூ.1 நாணயத்தை இனி வாங்க மாட்டோம் என அறிவிப்பு
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிச்சைக்காரர்கள் ரூ. 1 நாணயத்தை இனி வாங்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் ரூ.1 நாணயத்தை இனி வாங்க மாட்டோம் என அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கி வாசல்களிலும், தபால் நிலையங்களிலும் காத்திருந்தனர்.

வயோதிகர்கள் உயிரிழப்பு
வங்கி வாயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கிய முதியவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் புதிய ரூ. 2000 அறிமுகப்படுத்தப்பட்டதால் சில்லறை தட்டுப்பாடும் நிலவியது.

ஓராண்டு நிறைவு விழா
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அதனை எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்தனர். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அடைந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். இதுபோல் அதிக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம்.

ரூ. 1 நாணயம் செல்லாது என அறிவிப்பு
உத்தரப் பிரதேச மாநில பிச்சைக்காரர்களும் மத்திய அரசை போல் ரூ. 1 நாணயத்தை செல்லாது என்று அறிவித்து அதிரடி காட்டியுள்ளனர். ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பிச்சைக்காரர்கள்தான் இதுபோன்று ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

விளக்கம் கூறிய பிச்சைக்காரர்கள்
இதுகுறித்து பிச்சைக்காரர்கள் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது போல் தாங்களும் 50 பைசா அளவிலான ரூ 1 நாணயத்தை செல்லாது என்று அறிவித்தோம். இந்த நாணயம் சிறிய அளவில் இருப்பதால் கடைக்காரர்கள், ரிக்ஷா இழுக்கும் தொழிலாளர்கள் ரூ. 1 நாணயத்தை வாங்குவதை இல்லை. ஆனால் நாங்கள் மட்டும் ஏன் வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications