பீகார்: அமைதியாக நடந்த முதல் கட்ட சட்டசபை தேர்தல்- 57% வாக்குப் பதிவு!
பாட்னா: பீகாரில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் இன்று அமைதியாக நடைபெற்று முடிவடைந்தது. 49 தொகுதிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் 57% வாக்குகள் பதிவாகி இருந்தன.
பீகாரில் 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இன்று தேர்தல் இன்று முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
இன்றைய முதல் கட்ட தேர்தலில் 10 மாவட்டங்களில் உள்ள 49 தொகுதிகளில் 583 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். அவர்களில் 54 பேர் பெண் வேட்பாளர்கள். தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை சுமார் 1,35,72,339 பேர் பெற்றவர்கள். அவர்களில் 72,37,253 பேர் ஆடவர்கள்; 63,17,602 பேர் பெண்கள். 405 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
பெரும்பாலான தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. நக்ஸலைட் ஆதிக்கம் உள்ள சில இடங்களில் மட்டும் சட்டம்-ஒழுங்கு நிலையை கவனத்தில் கொண்டு மாலை 3 மற்றும் 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற 13,212 வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுதம் ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.
இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கிய சில மணிநேரங்களில் 13% பேர் வாக்களித்திருந்தனர். முற்பகல் 11 மணியளவில் இது 28% ஆக அதிகரித்திருந்தது.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள ஜமோய் பகுதியி மாலை 3 மணியுடன் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. மொத்தமாக மாலை 3 மணிவரை 49% வாக்குகள் பதிவாகி இருந்தன.
பின்னர் மாலை 5 மணியுடன் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. இன்றைய தேர்தலில் 57% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications