பீகார்: அமைதியாக நடந்த முதல் கட்ட சட்டசபை தேர்தல்- 57% வாக்குப் பதிவு!
பாட்னா: பீகாரில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் இன்று அமைதியாக நடைபெற்று முடிவடைந்தது. 49 தொகுதிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் 57% வாக்குகள் பதிவாகி இருந்தன.
பீகாரில் 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இன்று தேர்தல் இன்று முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
இன்றைய முதல் கட்ட தேர்தலில் 10 மாவட்டங்களில் உள்ள 49 தொகுதிகளில் 583 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். அவர்களில் 54 பேர் பெண் வேட்பாளர்கள். தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை சுமார் 1,35,72,339 பேர் பெற்றவர்கள். அவர்களில் 72,37,253 பேர் ஆடவர்கள்; 63,17,602 பேர் பெண்கள். 405 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
பெரும்பாலான தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. நக்ஸலைட் ஆதிக்கம் உள்ள சில இடங்களில் மட்டும் சட்டம்-ஒழுங்கு நிலையை கவனத்தில் கொண்டு மாலை 3 மற்றும் 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற 13,212 வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுதம் ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.
இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கிய சில மணிநேரங்களில் 13% பேர் வாக்களித்திருந்தனர். முற்பகல் 11 மணியளவில் இது 28% ஆக அதிகரித்திருந்தது.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள ஜமோய் பகுதியி மாலை 3 மணியுடன் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. மொத்தமாக மாலை 3 மணிவரை 49% வாக்குகள் பதிவாகி இருந்தன.
பின்னர் மாலை 5 மணியுடன் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. இன்றைய தேர்தலில் 57% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கண்ட்ரோலை எடுக்கும் பாஜக! ஒரு காலத்தில் பீகாரில் மோடியை.. கால் வைக்க விடாத நிதிஷுக்கு நேர்ந்த கதி! -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது!












Click it and Unblock the Notifications