For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாயை மூடி பேசவும்.. சாமியார் பிரக்யாவுக்கு பாஜக தொடர்ந்து தடை!

பாஜக சாமியார் பேச கட்சி தலைமை தடை விதித்துள்ளது.

Google Oneindia Tamil News

போபால்: தேவையில்லாமல் சர்ச்சைக் கருத்துக்களை மட்டுமே பேசி வருவதால் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூருக்கு மே 19ம் தேதி வரை அதாவது கடைசிக் கட்ட வாக்குப் பதிவு முடியும் வரை பேசுவதற்கு பாஜகதடை விதித்துள்ளது.

போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் பிரக்யா. மாலேகான் குண்டுவெடிப்பில் சிக்கி கைதாகி சிறைக்குப் போய் திரும்பியவர் பிரக்யா. வெளியே வந்ததும் அவரை போபால் வேட்பாளராக்கியது பாஜக.

BJP gags Pragya Singh Thakur till May 19 voting

ஆனால் வெளியில் வந்தது முதல் தொடர்ந்து சர்ச்சையாகவே பேசி வந்தார் பிரக்யா. இதனால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து கடைசிக் கட்ட தேர்தல் முடியும் வரை பேசவே கூடாது என கட்சி மேலிடம் அவருக்குத் தடை விதித்து விட்டது.

இவர் ஏதாவது பேசப் போக, மத்தியப் பிரதேசத்தில் பெரும் பாதிப்பு வந்து விடுமோ என பாஜக பயப்படுகிறதாம். காரணம், பிரக்யாவின் பேச்சு அப்படி மோசமாக உள்ளதால்.

சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை- ஆர்டிஐ தகவல் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை- ஆர்டிஐ தகவல்

இதன் காரணமாக பொது இடங்களில் தற்போது பேசுவதைத் தவிர்த்து வருகிறார் பிரக்யா. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே குறித்து பிரக்யா தெரிவித்த மோசமான கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். நான் விட்ட சாபத்தால்தான் கர்கரே உயிரிழந்தார் என்று பிரக்யா கூறியிருந்தார்.

போபால் தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார் பிரக்யா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP restrains ‘motormouth’ Pragya Singh Thakur till May 19
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X