வெளிநாட்டில் மோடி: அரசில் நம்பர் 2 ராஜ்நாத் சிங்கா? அருண் ஜேட்லியா?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசில் 2வது இடம் ராஜ்நாத்சிங்குக்கு? அருண்ஜேட்லிக்கா? என்ற புதிருக்கு விடை கிடைத்தபாடில்லைதான்..
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது அவருக்கு அடுத்தபடியாக ராஜ்நாத்சிங் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். அதனால் அவர்தான் மோடிக்கு அடுத்த இடத்துக்குரியவர் என கருதப்பட்டது.

மூன்று துறைகள் ஒதுக்கீடு
ஆனால் இலாகா ஒதுக்கீட்டில் ராஜ்நாத்சிங்குக்கு உள்துறை மட்டுமே ஒதுக்கப்பட்டது. நிதி, பாதுகாப்பு, கம்பெனி விவகாரங்கள் என மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டன. இதனால் அருண்ஜேட்லிதான் மோடிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று ஒருதரப்பு கூறியது.

பார்லி தலைவராக மோடி
இதை ராஜ்நாத்சிங் ஆதரவாளர்கள் ஏற்க மறுத்தனர். இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜ்நாத்சிங்- ஜேட்லி
லோக்சபாவில் துணைத் தலைவராக ராஜ்நாத்சிங்கும், ராஜ்யசபாவில் துணைத் தலைவராக அருண்ஜேட்லியும் நியமிக்கப்பட அந்த 2வது இடத்துக்கான புதிரும் நீண்டு கொண்டிருந்தது.

வெளிநாடு சென்ற பிரதமர்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசிலுக்கு சென்றுள்ளார். பிரதமர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், 'ராஜ்நாத்சிங்கைதான் கேபினட்டுக்கு தலைமை தாங்குமாறு மோடி கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அருண்ஜேட்லி ஆதரவாளர்கள் நிராகரித்துவிட்டனர்.

இருவரையும்தான்..
ராஜ்நாத் மற்றும் ஜேட்லி இருவரையும்தான் தாம் வரும் வரை வெளிநாட்டுக்குப் போக வேண்டாம் என்று மோடி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

பட்டும் படாமலும்
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர், பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் என அனைவரும் இருக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறினாரே தவிர யார் கேபினட்டில் சீனியர் என்பதைக் கூறவில்லை.

தொடரும் புதிர்
இதனால் மோடி அரசில் 2வது இடம் ராஜ்நாத்சிங்குக்கா? அருண்ஜேட்லிக்கா என்ற புதிர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications