"குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணமானவர்களை பாஜக பாதுகாக்கிறது" -கெஜ்ரிவால் விளாசல்
அகமதாபாத்: குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணமானவர்களை பாஜக பாதுகாக்கிறது. குஜராத்துக்கு புதிய என்ஜின் அரசாங்கம் தான் தேவை. இரட்டை என்ஜின் துருபிடித்துவிட்டது. பழசாகிவிட்டது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பாஜகவை விளாசி பிரசாரம் மேற்கொண்டார்.
குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி அனல் பறக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மோர்பி மாவட்டம் வன்கனெர் டவுன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பாஜக மீது விமர்சனங்களை முன்வைத்த கெஜ்ரிவால், மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை பாஜக அரசு காப்பாற்ற முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-

55 பேர் குழந்தைகள்
மோர்பில் நடைபெற்ற சம்பவம் மிகவும் துயரமானது. பலியான 150- பேரில் 55 பேர் குழந்தைகள் என்பது வேதனைக்குரியது. ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை காப்பாற்றும் முயற்சி நடக்கிறது என்பதுதான். இரட்டை என்ஜின் கொண்ட பாஜக அரசாங்கத்திற்கு வாக்களித்து அதிகாரத்திற்கு கொண்டு வந்தால் மோர்பி போன்ற சம்பவங்கள் அரங்கேறும்.

விபத்துக்கு காரணமானவர்களை காப்பாற்ற
மோர்பி பாலம் இடிந்து விழுந்து விபத்துக்கு காரணமானவர்களை ஏன் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்? இந்த விபத்துக்கு காரணமானவர்களுடன் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி இல்லையா? மோர்பி பாலத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்ட ஒரேவா குழுமத்தின் உரிமையாளர்கள் பெயர் எப்.ஐ.ஆரில் இடம் பெறவில்ல. எங்களுக்கு இரட்டை என்ஜின் அரசாங்கம் தேவையில்லை.

இரட்டை என்ஜின் துருபிடித்துவிட்டது
ஆனால், புதிய என்ஜின் அரசாங்கம் தான் தேவை. இரட்டை என்ஜின் துருபிடித்துவிட்டது. பழசாகிவிட்டது. எனவே அதை அழிக்க வேண்டும். நீங்கள் மீண்டும் இரட்டை என்ஜின் அரசாங்கத்தை கொண்டு வந்தால் மோர்பி பாலம் இடிந்து விழும். நீங்கள் புதிய என்ஜின் அரசாங்கத்தை கொண்டுவந்தால் பிரம்மாண்ட மோர்பி பாலத்தை கட்டுவோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை
மேலும் அவர் கூறுகையில், ''குஜராத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் டெல்லியில் செய்தவையே. நான் படித்தவன். எப்படி பணி செய்ய வேண்டும். எப்படி பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று எனக்கு தெரியும். எங்களுக்கு பொய் வாக்குறுதிகள் அளிக்கும் பழக்கம் கிடையாது. வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் போடுவதாக நான் வாக்குறுதி கொடுக்கவில்லை. நான் நேர்மையானவன். எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை'' என்றார்.
-
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு!












Click it and Unblock the Notifications