"குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணமானவர்களை பாஜக பாதுகாக்கிறது" -கெஜ்ரிவால் விளாசல்
அகமதாபாத்: குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணமானவர்களை பாஜக பாதுகாக்கிறது. குஜராத்துக்கு புதிய என்ஜின் அரசாங்கம் தான் தேவை. இரட்டை என்ஜின் துருபிடித்துவிட்டது. பழசாகிவிட்டது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பாஜகவை விளாசி பிரசாரம் மேற்கொண்டார்.
குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி அனல் பறக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மோர்பி மாவட்டம் வன்கனெர் டவுன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பாஜக மீது விமர்சனங்களை முன்வைத்த கெஜ்ரிவால், மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை பாஜக அரசு காப்பாற்ற முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-

55 பேர் குழந்தைகள்
மோர்பில் நடைபெற்ற சம்பவம் மிகவும் துயரமானது. பலியான 150- பேரில் 55 பேர் குழந்தைகள் என்பது வேதனைக்குரியது. ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை காப்பாற்றும் முயற்சி நடக்கிறது என்பதுதான். இரட்டை என்ஜின் கொண்ட பாஜக அரசாங்கத்திற்கு வாக்களித்து அதிகாரத்திற்கு கொண்டு வந்தால் மோர்பி போன்ற சம்பவங்கள் அரங்கேறும்.

விபத்துக்கு காரணமானவர்களை காப்பாற்ற
மோர்பி பாலம் இடிந்து விழுந்து விபத்துக்கு காரணமானவர்களை ஏன் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்? இந்த விபத்துக்கு காரணமானவர்களுடன் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி இல்லையா? மோர்பி பாலத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்ட ஒரேவா குழுமத்தின் உரிமையாளர்கள் பெயர் எப்.ஐ.ஆரில் இடம் பெறவில்ல. எங்களுக்கு இரட்டை என்ஜின் அரசாங்கம் தேவையில்லை.

இரட்டை என்ஜின் துருபிடித்துவிட்டது
ஆனால், புதிய என்ஜின் அரசாங்கம் தான் தேவை. இரட்டை என்ஜின் துருபிடித்துவிட்டது. பழசாகிவிட்டது. எனவே அதை அழிக்க வேண்டும். நீங்கள் மீண்டும் இரட்டை என்ஜின் அரசாங்கத்தை கொண்டு வந்தால் மோர்பி பாலம் இடிந்து விழும். நீங்கள் புதிய என்ஜின் அரசாங்கத்தை கொண்டுவந்தால் பிரம்மாண்ட மோர்பி பாலத்தை கட்டுவோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை
மேலும் அவர் கூறுகையில், ''குஜராத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் டெல்லியில் செய்தவையே. நான் படித்தவன். எப்படி பணி செய்ய வேண்டும். எப்படி பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று எனக்கு தெரியும். எங்களுக்கு பொய் வாக்குறுதிகள் அளிக்கும் பழக்கம் கிடையாது. வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் போடுவதாக நான் வாக்குறுதி கொடுக்கவில்லை. நான் நேர்மையானவன். எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை'' என்றார்.
-
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
அனைத்து ஊழியர்களுக்கும் ஐபோன் 17 Pro Max-ஐ கிப்ட் கொடுத்த சீன நிறுவனம்! இந்தியாவின் நிலைமையை பாருங்க -
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
அடுத்த தலைமுறைக்கான 'டிஜிட்டல் தங்கம்'.. உலகையே கண்ட்ரோலில் எடுக்கும் சீனா.. அப்போ இந்தியா எங்கே? -
இந்தியாவில் முதல்முறை! சிறந்த பணியிட மகிழ்ச்சி விருதுகள் அறிமுகம்! ஹர்ஷ் கோயங்கா தலைமையில் மெகா டீம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா!












Click it and Unblock the Notifications