பாஜக எம்எல்ஏக்கள் கடிதத்துடன் ஆளுநருடன் சந்திப்பு.. ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பா- வீடியோ

    பெங்களூர்: ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் பாஜக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை எடியூரப்பா வழங்கியுள்ளார்.

    மல்லேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடியூரப்பாவை பாஜக எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கையெழுத்துடன் கூடிய கடிதத்துடன், ஆளுநரை ராஜ்பவனில் எடியூரப்பா, ஈஸ்வரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சந்தித்தனர். காலை 11.15 மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பித்தது.

    BS Yeddyurappa elected as BJP legislative party leader

    அப்போது, ஆளுநரிடம் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் வழங்கப்பட்டது. ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்புவிடுக்க எடியூரப்பா கோரிக்கைவிடுத்தார்.

    நேற்று மாலையில் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து, பாஜகவை ஆட்சியமைக்க கோரிக்கைவிடுத்த நிலையில், இப்போது எம்எல்ஏக்கள் கடிதத்துடன் சென்று மீண்டும் அதை வலியுறுத்தியுள்ளார்.

    இதனிடையே, கர்நாடக பிரஞ்யாவந்த ஜனதா கட்சி (கேபிஜேபி) என்ற சிறு கட்சி சார்பில் ராணிபென்னூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சங்கர், பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்ததாக கூறப்பட்டது. இதனால் பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் பலம் 105ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்ட நிலையில், ்வர் மாலையில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+