பட்ஜெட் 2015: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ 3 லட்சமாகிறது?
டெல்லி: இந்த ஆண்டு பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் பட்ஜெட் தேதி நெருங்க நெருங்க மாதச் சம்பளதாரர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பது வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்வைத்தான். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 28-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜூலை 10-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தினார்.

அது மட்டுமின்றி சேமிப்புகள் உள்ளிட்டவை அடங்குகிற 80-சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகை உச்சவரம்பையும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தினார். பி.பி.எப். என்னும் பொது சேம நிதியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்ததை ரூ.1.5 லட்சமாக அதிகரித்தார். வீட்டு கடன் மீதான வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்ததையும் ரூ.2 லட்சமாக உயர்த்தினார்.
இந்த நிலையில், வரும் 28-ந் தேதி மத்திய நிதி மந்திரி 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்தான், பாரதிய ஜனதா கூட்டணி அரசின் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு கணிசமாக உயர்த்தப்படும் என நம்புகின்றனர்.
இந்த ஆண்டு இந்த உச்சவரம்பு ரூ.3 லட்சம் என்ற அளவுக்கு உயர்த்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இதுகுறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். நடுத்தர மக்களின் வாக்குகள் மற்றும் வரவிருக்கும் தமிழகம் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்கள் போன்றவை பட்ஜெட்டில் கணிசமான சலுகைகளை அறிவிக்க வைக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications