பட்ஜெட் 2015: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ 3 லட்சமாகிறது?
டெல்லி: இந்த ஆண்டு பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் பட்ஜெட் தேதி நெருங்க நெருங்க மாதச் சம்பளதாரர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பது வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்வைத்தான். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 28-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜூலை 10-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தினார்.

அது மட்டுமின்றி சேமிப்புகள் உள்ளிட்டவை அடங்குகிற 80-சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகை உச்சவரம்பையும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தினார். பி.பி.எப். என்னும் பொது சேம நிதியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்ததை ரூ.1.5 லட்சமாக அதிகரித்தார். வீட்டு கடன் மீதான வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்ததையும் ரூ.2 லட்சமாக உயர்த்தினார்.
இந்த நிலையில், வரும் 28-ந் தேதி மத்திய நிதி மந்திரி 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்தான், பாரதிய ஜனதா கூட்டணி அரசின் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு கணிசமாக உயர்த்தப்படும் என நம்புகின்றனர்.
இந்த ஆண்டு இந்த உச்சவரம்பு ரூ.3 லட்சம் என்ற அளவுக்கு உயர்த்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இதுகுறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். நடுத்தர மக்களின் வாக்குகள் மற்றும் வரவிருக்கும் தமிழகம் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்கள் போன்றவை பட்ஜெட்டில் கணிசமான சலுகைகளை அறிவிக்க வைக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications