பணத்தை விட்டுவிட்டு 75 கிலோ தக்காளியை மட்டும் 'ஆட்டைய போட்ட' கொள்ளையர்கள்!!
ஜெய்ப்பூர்: பணத்தைவிட விலை மதிப்புள்ள பொருளாகிவிட்டது தக்காளி.. ராஜஸ்தான் மாநிலத்தில் சந்தைப் பகுதியில் 21 கடைகளில் நுழைந்த திருடர்கள் பணத்தை விட்டுவிட்டு 75 கிலோ தக்காளியை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அண்மைக்காலமாக தக்காளியின் விலைதான் அனைவரையும் மிரட்டி வருகிறது. இதனால் தக்காளியை பார்த்தாலே அச்சம்தான் ஏற்பட்டு வருகிறது.
சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ80 முதல் ரூ100 வரை விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை விட தக்காளி விலைதான் பெரும்பாடுபடுத்தி வருகிறது.

ராஜஸ்தான் கொள்ளை
இதனால்தான் என்னவோ பணத்தை கொள்ளையடிப்பதைவிட தக்காளிக்கு குறி வைக்கிறார்கள் போல கொள்ளையர்கள்.. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவமே இதற்கு சாட்சி..

தக்காளி மட்டுமே கொள்ளை
அம்மாநிலத்தின் டயூசா மாவட்டத்தில் கொட்வாலி போலீஸ் நிலையம் அருகே சாப்ஸி மண்டி உள்ளது. இந்த மண்டிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 21 கடைகளின் பூட்டை உடைத்து கடைகளில் இருந்த தக்காளியை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பணத்தை தொடாத கொள்ளையர்கள்
ஆனால் கடைகளில் கல்லாவில் இருந்த பணம் எதுவுமே திருடப்படவில்லை. தக்காளிகளை குறிவைத்தே கொள்ளையர்கள் வந்துள்ளனர்.

75 கிலோ தக்காளி கொள்ளை
மொத்தம் 75 கிலோ தக்காளி கொள்ளையடிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தக்காளி கொள்ளையர்களுக்கு வலை
இதைத் தொடர்ந்து தக்காளி கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications