கூரையை பிய்த்துக் கொண்டு பாய்ந்த சிறுத்தை... அலறி ஓடிய மக்கள்: 'கிலி' காட்சிகள்
சந்திராபூர்: மராட்டிய மாநிலத்தில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த சிறுத்தைப் புலி ஒன்றை பொதுமக்கள் உதவியோடு வனத்துறையினர் பிடிப்பதற்காக மேற்கொண்ட சாகசச் செயல்கள் வீடியோ காட்சிகளாக வெளியாகியுள்ளது. சிறுத்தைப் புலியைப் பிடிப்பதற்கு அவர்கள் படும் பாடு கிலியை ஏற்படுத்துவதாக உள்ளது.
மராட்டிய மாநிலத்தின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள பல்லாப்பூர் என்ற வனப்பகுதி கிராமத்திற்குள் நேற்று சிறுத்தை புலி ஒன்று புகுந்தது. குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தைப் புலி குறித்த தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப் பட்டது.
வனத் துறையினர் வருவதற்குள்ளாக அழையா விருந்தினராக விவசாயி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்தது சிறுத்தைப் புலி. முன்வாசல் வழியாக சிறுத்தைப் புலி நுழைவதைப் பார்த்த வீட்டின் உள்ளே இருந்தவர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி, பதறிப் போய் பின் வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறினர்.
அதற்குள் சம்பவ இடத்திற்கு சிறுத்தைப் புலியை பிடிப்பதற்கு தேவையான வலை மற்றும் உபகரணங்களுடன் வந்து சேர்ந்தனர்.

வீட்டைச் சுற்றி வலை....
சிறுத்தைப் புலி புகுந்த வீடு ஓடுகளால் கூரை போடப்பட்டது. இதனால் அவ்வீட்டை விட்டு சிறுத்தை தப்பி விடாதபடி வீட்டைச் சுற்றி முதலில் வலை ஒன்று கட்டப்பட்டது.

வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை...
பின்னர் மெதுவாக வீட்டின் கதவைத் திறந்து வைத்தனர். ஆனால், வெகு நேரமாகியும் சிறுத்தையார் வெளியே வந்தபாடில்லை.

ஓட்டைப் பிரித்து பிடிக்க முயற்சி...
பொறுமையிழந்த வனத்துறையினர் ஓட்டைப் பிரித்து வீட்டிற்குள் இறங்கி சிறுத்தையைப் பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக வீட்டின் கூரையில் ஏறி, ஓட்டைப் பிரிக்க ஆரம்பித்தனர் அவர்கள்.

பாய்ந்து வந்த சிறுத்தை...
ஆனால், அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கூரையைப் பிய்த்துக் கொண்டு சிறுத்தை வெளியே வந்தது. இதனைக் கண்ட பொதுமக்களும், வனத்துறையினரும் அலறி ஓடினர்.

பிடிபட்டது...
பின்னர் மீண்டும் வீட்டிற்குள் குதித்த சிறுத்தை வீட்டின் குளியலறையில் பதுங்கியது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் சிறுத்தை பிடிபட்டது.

சிகிச்சை...
ஆனபோதும், சிறுத்தை தாக்கியதில் இருவர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

வீடுகள் சேதம்...
இந்த சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படாத நிலையில் அப்பகுதியில் சில வீடுகள் மாத்திரம் சேதமாகியுள்ளன. சிறுத்தை பிடிபட்டதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

வீடாகும் காடுகள்...
சட்டவிரோதமாக மரங்கள் அழிக்கப் படுதல் மற்றும் வனப்பகுதியில் புதிய குடியேற்றங்களை அமைத்தல் போன்ற காரணங்களாலேயே இவ்வாறு வனவிலங்குகள் குடியேற்றப் பகுதிக்குள் நுழைகின்றன என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications