காவிரி வழக்குகள்- ஜன. 4-க்கு ஒத்தி வைப்பு! தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மீண்டும் உத்தரவு!!
டெல்லி: காவிரி தொடர்பான வழக்குகள் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதுவரை வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரை தமிழகத்தஇற்கு திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவு தொடரும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி, தமிழகத்திற்கு கர்நாடகா, ஜூன், 1 முதல், மே 31 வரை ஓராண்டுக்கு, 192 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். நடப்பாண்டு, 59.5 டி.எம்.சி., நீர் மட்டுமே வழங்கியுள்ளது. நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, மீதமுள்ள, 115 டி.எம்.சி., நீரை மாதாந்திர அளவுப்படி, கர்நாடகா வழங்கவில்லை.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 'காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, டிசம்பர் 15 முதல் துவங்கும். அதுவரை கர்நாடகா, தமிழகத்திற்கு வினாடிக்கு, 2,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இந்த உத்தரவை செயல்படுத்த முடியாத அளவுக்கு கர்நாடகாவில் வறட்சி இருப்பதாக கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று காவிரி தொடர்பான வழக்கு விசாரணை வர வேண்டிய நிலையில், வழக்குகள் அனைத்தும் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பண மதிப்புழப்பு வழக்கை விசாரிப்பதில் காவிரி பெஞ்ச் நீதிபதி முழு வீச்சில் இருப்பதால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அதுவரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறப்பை தொடர வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவாகும்.
-
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications