காவிரி நடுவர் மன்ற பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்த மத்திய அரசு
டெல்லி: காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக் காலம், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களிடையே காவிரி நதிநீரை பங்கிடுவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, 1990ம் ஆண்டு, ஜூன், 2ம் தேதி, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991ம் ஆண்டு தனது இடைக்கால தீர்ப்பை நடுவர்மன்றம் வழங்கியது.

நீண்ட விசாரணைகளுக்குப் பின், 2007ம் ஆண்டு பிப்ரவரி 5ல் நடுவர் மன்றம் அதன் இறுதி தீர்ப்பை வழங்கியது. காவிரியில் ஆண்டுதோறும், ஜூன் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், தமிழகத்துக்கு, 192 டி.எம்.சி, தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்பதே அந்த தீர்ப்பு.
இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், காவிரி நடுவர் மன்ற பதவிக்காலம் கடந்த வியாழக்கிழமமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக்காலம் 2018, மே, 2ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications