தண்ணீருக்காக தமிழகம், கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை வருத்தமளிக்கிறது: சந்திரபாபு நாயுடு
விஜயவாடா: காவிரி நதி நீர் தொடர்பாக கர்நாடகா, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை மிகவும் வருத்தமளிக்கிறது என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் தொடர்பாக கர்நாடகா, தமிழகத்தில் வன்முறையால் ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளித்துள்ளது. வன்முறை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. தண்ணீர் தட்டுப்பாடு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

விஜயவாடாவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "ஆந்திராவில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும், சேமிக்கவும் புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் 1.31 மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இது ஒரு கோடியே 19 லட்சம் கன அடி தண்ணீருக்கு சமம்.
இத்திட்டத்தின் மூலம் விவசாயத்திற்கான தண்ணீர் தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல், தொழிற்சாலை மற்றும் இதர துறைகளுக்குமான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கம். இதில் பொறியியல் கல்லூரி மாணவர்களை இணைத்து அவர்களின் உதவியையும், ஆலோசனையையும் கோரியுள்ளது.
பண்டா சஞ்சீவானி திட்டத்தின் கீழ் இதுவரை 73, 970 குளங்கள் சீர்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 2,69,964 குளங்கள் ஆழப்படுத்தி சீர்படுத்தப்பட உள்ளது. இது நிலத்தடி நீர் மட்டம் மட்டுமின்றி தண்ணீர் தட்டுப்பட்டை போக்க வழிவகுக்கும், இதுபோன்ற திட்டங்களை மற்ற மாநிலங்களும் செயல்படுத்தும் பட்சத்தில், எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கலாம்" என தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications