நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை அசைத்து பார்க்காதீர்கள்: இந்திய தலைமை நீதிபதி லோதா
டெல்லி: சமூகத்திலுள்ள அனைவரும் சரியானவர்கள் கிடையாது, நாங்களும் அந்த சமூகத்தில் இருந்துதான் வந்துள்ளோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்தார்.
நீதிபதிகளை தேர்வு செய்யும் குழு (கொலீஜியம்) அமைப்பை கலைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி லோதா முன்னிலையில் வந்தது.

எங்கள் தேர்வே கேள்விக்குறியாகும்
இன்றைய வழக்கு விசாரணையின்போது லோதா கூறுகையில் "நீதிபதிகள் தேர்வு குழு மூலமாக தேர்வு செய்யப்பட்ட முதல் பேட்ஜ் நீதிபதிகளில் நானும் ஒருவர். நாரிமனும் சமீபத்தில் இதுபோலத்தான் தேர்வு செய்யப்பட்டார். எனவே இந்த நடைமுறை தவறு என்று தீர்ப்பளித்தால், எங்களது தேர்வும் தவறு என்பதைப்போலத்தான் ஆகும்.

குறைபாடுள்ள சமூகம்
இந்த சமூகத்தில் யார் ஒருவரையும் குறைபாடற்ற மனிதர் என்று கூறிவிட முடியாது. அந்த குறைபாடு உள்ள சமூகத்தில் இருந்துதான் நாங்களும் (நீதிபதிகள்) வந்துள்ளோம்.

பொது நல மனு தள்ளுபடி
தயவு செய்து நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை அசைத்து பார்க்காதீர்கள்". இவ்வாறு லோதா தெரிவித்தார். இதன்பிறகு, இதுதொடர்பான பொது நல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கட்ஜு சர்ச்சை விமர்சனம்
நீதித்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக, முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு குற்றம் சாட்டி வருகிறார். மேலும், தற்போதுள்ள நீதிபதிகள் தேர்வு முறையை மாற்றியமைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

லோதா அதிரடி
இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், நீதித்துறை மாண்பை காக்க வேண்டும், நீதிபதிகள் தேர்வு முறை சரியானதுதான் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications