நிலக்கரி ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து 41 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நிலக்கரி ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து 41 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நிலங்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையின் போது நிலங்கரி சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து விளக்கம் கேட்டு 41 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிறுவனங்கள் 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications