தேர்தலுக்குப் பின் ஆதரவு கொடுக்க கியூவில் நிற்பாங்க.. கருணாநிதி குறித்து காங். அபிஷேக் சிங்வி!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் நான், மோடி அலையை எங்கும் காணவில்லை. அதனால்தான் மோடியை நம்பாமல் கூட்டணிக் கட்சிகளை பாரதிய ஜனதா கட்சி நம்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளின் முதுகில் பாஜக சவாரி செய்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது பெருமையாக உள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கௌரவமான இடங்களில் வெற்றி பெறும். கணிசமான வாக்குகளைப் பெறும். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது மற்ற கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகவே சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் நன்றி மறந்தது கிடையாது. காங்கிரஸ் நாடு முழுவதும் மக்கள் செல்வாக்குடன் இருக்கும் கட்சி. காங்கிரஸ் நன்றி மறந்து விட்டதாகவும், தேர்தலுக்குப் பிறகு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுக தாமதமாக விழித்துக் கொண்டுள்ளது.
2009 தேர்தலின்போது காங்கிரஸ் தோற்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனாலும் காங்கிரஸ் 2004 தேர்தலைவிட அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது. அதுபோல இந்தத் தேர்தலில் 2009 வரலாறு திரும்பும்.
மே 16-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸ் கட்சியை நோக்கி ஆதரவு தருவதற்கு மற்ற கட்சிகள் அணிவகுக்கும்.
இவ்வாறு அபிஷேக்சிங்வி கூறினார்.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications