தேர்தலுக்குப் பின் ஆதரவு கொடுக்க கியூவில் நிற்பாங்க.. கருணாநிதி குறித்து காங். அபிஷேக் சிங்வி!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் நான், மோடி அலையை எங்கும் காணவில்லை. அதனால்தான் மோடியை நம்பாமல் கூட்டணிக் கட்சிகளை பாரதிய ஜனதா கட்சி நம்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளின் முதுகில் பாஜக சவாரி செய்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது பெருமையாக உள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கௌரவமான இடங்களில் வெற்றி பெறும். கணிசமான வாக்குகளைப் பெறும். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது மற்ற கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகவே சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் நன்றி மறந்தது கிடையாது. காங்கிரஸ் நாடு முழுவதும் மக்கள் செல்வாக்குடன் இருக்கும் கட்சி. காங்கிரஸ் நன்றி மறந்து விட்டதாகவும், தேர்தலுக்குப் பிறகு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுக தாமதமாக விழித்துக் கொண்டுள்ளது.
2009 தேர்தலின்போது காங்கிரஸ் தோற்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனாலும் காங்கிரஸ் 2004 தேர்தலைவிட அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது. அதுபோல இந்தத் தேர்தலில் 2009 வரலாறு திரும்பும்.
மே 16-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸ் கட்சியை நோக்கி ஆதரவு தருவதற்கு மற்ற கட்சிகள் அணிவகுக்கும்.
இவ்வாறு அபிஷேக்சிங்வி கூறினார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா












Click it and Unblock the Notifications