பிணவறையில் சுற்றிலும் சடலங்கள்.. அதுக்கு நடுவே உடலுறவு.. யாரந்த பெண்? வீடியோ எடுத்திருக்காங்க.. ஐயோ
கான்பூர்: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைப்பார்த்த பலரும் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபலமான மருத்தவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.. செக்டார் 94ல் இந்த மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடம் உள்ளது.

இந்த போஸ்ட் மார்ட்டம் ரூமிலேயே, ஆண் ஒருவர் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும், வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது.. சம்பந்தப்பட்ட நபர், அதே மார்ச்சுவரிலேயே துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருபவராம்..
பெண் யார்: இந்த பிரேத பரிசோதனை அறை முழுக்க வெறும் சடலங்களாகவே நிறைந்திருக்கின்றன.. இந்த சடலங்களுக்கு மத்தியில்தான், அந்த ஊழியர், பெண்ணுடன் உடலுறவு கொள்கிறார்.. இந்த காட்சியை, அதே மார்ச்சுவரியின் சக ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்திருக்கிறார்.. இந்த நபர் வீடியோ எடுப்பதை, அந்த ஜோடி கவனித்துள்ளது.. ஆனாலும், தொடர்ந்து அதே இழிவான காரியத்தில் இருவரும் ஈடுபட்டிருக்கிறார்கள்..
இதனால், வீடியோ எடுத்தவர், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிட்டார்.. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார்கள்.. தற்போது போலீசார் இதுகுறித்து பதிலளித்துள்ளனர்.. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளியையும் கைது செய்திருக்கிறார்களாம்.
ஊழியர்கள்: அதேபோல, துப்புரவு தொழிலாளியை அவரது உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.. ஆனால், அந்த பெண் யார் என்று தெரியவில்லையாம்..
பெரும்பாலும், மார்ச்சுவரி அறைகளில் எப்போதுமே பெண் ஊழியர்களை வேலைக்கு பணியமர்த்தப்படுவதில்லை... அதனால், வீடியோவில் உள்ள பெண் வெளியில் இருந்து வந்தவர் என்கிறார்கள்.. அப்படியானால், இந்த பாலியல் செயல் பெண்ணின் சம்மதத்துடன் செய்யப்பட்டதா? கட்டாயப்படுத்தப்பட்டதா? அந்த பெண் யார்? என்ற விசாரணையை போலீசார் தற்போது நடத்தி வருகிறார்களாம்.
நொய்டா டிசிபி இதுகுறித்து கூறும்போது, கைது செய்யப்பட்ட நபரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.. சம்பந்தப்பட்ட ஊழியர் தவிர, வீடியோவை பதிவு செய்த பர்வேந்திரா மற்றும் சம்பவ இடத்திலிருந்த பானு ஆகிய 2 ஊழியர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்களாம்.
சஸ்பெண்ட்: அதேபோல, பிரேத பரிசோதனை அறையின் பொறுப்பாளர் டாக்டர் ஜெய்சலால் இதுகுறித்து சொல்லும்போது, "கைதாகியிருக்கும் துப்புரவு பணியாளர், கான்ட்ராக்ட் அடிப்படையில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.. இந்த வீடியோ வெளியானதுமே, அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்' என்றார்..
மருத்துவமனைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் தேசம் முழுவதும் எதிரொலித்து வரும்நிலையிலி, மார்ச்சுவரியில், பிணவறைகளுக்கு நடுவில், இந்த ஊழியரின் இழிசெயல் வீடியோ இன்னும் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications