5 வீடு, 6 மனைகள், 3 கார்கள், லாக்கர் நிறைய தங்கம், வெள்ளி: இது ஒரு கான்ஸ்டபிளின் சொத்து
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் கான்ஸ்டபிள் ஒருவருக்கு 5 சொகுசு வீடுகள், 6 மனைகள், 3 கார்கள், ஒரு எஸ்.யு.வி இருப்பது தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தலைமை கான்ஸ்டபிளாக இருப்பவர் அருண் சிங். லஞ்சம் வாங்க பெயர் போனவர். அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஜபல்பூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். பணிமாற்றம் செய்யப்பட்டதில் இருந்து அவர் பணிக்கு வராமல் இருந்துள்ளார்.

இதையடுத்து ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் அவர் பணிக்கு வராமல் இருப்பது பற்றி போபால் அலுவலக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தூர், ரேவா மற்றும் சத்னா ஆகிய நகரங்களில் உள்ள அருண் சிங்கின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.
இந்தூர் அண்ணபூர்னா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி அவருக்கு தலவாலிசந்தா பகுதியில் தலா 6 ஆயிரம் சதுர அடியில் இரண்டு மனைகள், மோ ரோட்டில் பண்ணை வீடு, மனைவி பெயரில் மனை, மகன் பெயரில் இரண்டு வீடுகள், போக்பாலில் அருண் பெயரில் வீடு, அனந்தபுரியில் இரண்டு மனைகள், நரேந்திரா நகரில் ஒரு மனை, நிபுஹாவில் 30 ஏக்கர் நிலம், ஒரு வீடு, ஹர்திகுர்தில் நிலம் ஆகியவை உள்ளன.
சோதனையின்போது அருண் சிங்கின் வீடுகளில் இருந்து நகை, பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கி லாக்கரில் துப்பாக்கி, தோட்டாக்கள், 132 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி ஆபரணங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
அருண் சிங்கிற்கு சொந்தமாக 3 கார்கள் மற்றும் ஒரு எஸ்யுவியும் உள்ளது. இத்தனை சொத்துக்களையும் அவர் லஞ்சப் பணம் மூலம் வாங்கியுள்ளார். 32 ஆண்டு காலம் பணி புரிந்ததில் அவர் வருமானத்தை விட அதிகமாக கோடிக் கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications