தாத்ரி கொலை சம்பவத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்! மாட்டிறைச்சி என்ற வார்த்தையே இல்லை
லக்னோ: தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் படுகொலை சம்பவம் நடந்து 3 மாதத்திற்கு பிறகு 15 பேரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாட்டிறைச்சி என்ற வார்த்தை குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் ஒரு குடும்பம் மாட்டிறைச்சி சமைத்து உண்டதாக வதந்தி பரவியது. அதன் தொடர்ச்சியாக முகமது அக்லக் (52) என்ற இஸ்லாமிய முதியவர் அக்கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்.

மாட்டிறைச்சிக்காக மனித உயிர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் 15 பேர் மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டுபேர் சிறுவர்களாகும். அக்லக்கின் மகள், இதில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக செயல்பட்டதாக உள்ளூர் பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ராணாவின் மகன் விஷால் என்பவர் பெயரும் காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய 7 பேர் கடந்த இரு நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மாட்டிறைச்சி என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. உ.பியில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications