பீகாரில் 34 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
பீகாரில் 1999ஆம் ஆண்டு கிராம மக்கள் 34 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பீகார் : 34 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு ஜெகனாபாத் மாவட்டம் செனாரி கிராமத்தில்நுழைந்த மாவோயிஸ்டுகள் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த 34 பேரை அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் இரவு 7.30 மணியளவில் ஒவ்வொருவராக அவர்களது கழுத்தை வெட்டிக் கொன்றனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக 45 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜெகனாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
45 பேரில் 5 பேர் இதுவரை தலைமறைவாக உள்ள நிலையில் 2 பேர் வழக்கு நடக்கும் போதே இறந்து விட்டனர். இதில் போதிய ஆதாரம் இல்லாததால் 23 பேர் விடுவிக்கப்பட்டு 15 பேர் குற்றவாளிகள் என கடந்த அக்டோபர் மாதம் உறுதி செய்த நீதிமன்றம் தண்டனை விவரங்களை ஒத்திவைத்தது.
இந்நிலையில் அவர்களில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ள ஜெகனாபாத் நீதிமன்றம் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications