பீகாரில் 34 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

பீகாரில் 1999ஆம் ஆண்டு கிராம மக்கள் 34 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பீகார் : 34 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டு ஜெகனாபாத் மாவட்டம் செனாரி கிராமத்தில்நுழைந்த மாவோயிஸ்டுகள் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த 34 பேரை அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் இரவு 7.30 மணியளவில் ஒவ்வொருவராக அவர்களது கழுத்தை வெட்டிக் கொன்றனர்.

Death sentence for 10 of killing 34 in 1999 Bihar massacre

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக 45 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜெகனாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

45 பேரில் 5 பேர் இதுவரை தலைமறைவாக உள்ள நிலையில் 2 பேர் வழக்கு நடக்கும் போதே இறந்து விட்டனர். இதில் போதிய ஆதாரம் இல்லாததால் 23 பேர் விடுவிக்கப்பட்டு 15 பேர் குற்றவாளிகள் என கடந்த அக்டோபர் மாதம் உறுதி செய்த நீதிமன்றம் தண்டனை விவரங்களை ஒத்திவைத்தது.

இந்நிலையில் அவர்களில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ள ஜெகனாபாத் நீதிமன்றம் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+