பீகாரில் 34 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
பீகாரில் 1999ஆம் ஆண்டு கிராம மக்கள் 34 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பீகார் : 34 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு ஜெகனாபாத் மாவட்டம் செனாரி கிராமத்தில்நுழைந்த மாவோயிஸ்டுகள் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த 34 பேரை அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் இரவு 7.30 மணியளவில் ஒவ்வொருவராக அவர்களது கழுத்தை வெட்டிக் கொன்றனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக 45 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜெகனாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
45 பேரில் 5 பேர் இதுவரை தலைமறைவாக உள்ள நிலையில் 2 பேர் வழக்கு நடக்கும் போதே இறந்து விட்டனர். இதில் போதிய ஆதாரம் இல்லாததால் 23 பேர் விடுவிக்கப்பட்டு 15 பேர் குற்றவாளிகள் என கடந்த அக்டோபர் மாதம் உறுதி செய்த நீதிமன்றம் தண்டனை விவரங்களை ஒத்திவைத்தது.
இந்நிலையில் அவர்களில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ள ஜெகனாபாத் நீதிமன்றம் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications