கட்சியிலிருந்து என்னை நீக்கியது நியாயமற்றது... ஜஸ்வந்த் சிங் வேதனை
ஜெய்சல்மார்: தன்னைக் கட்சியிலிருந்து நீக்கிய முடிவு நியாயமற்றது என்றும், பாரதீய ஜனதாவில் தனிப்பட்ட நபருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்.
பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் பர்மர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதனை கட்சி மேலிடம் ஏற்கவில்லை.

ஜஸ்வந்த் சிங் விரும்பிய பார்மர் தொகுதிக்கு சோனாராம் ஜவுத்திரியை வேட்பாளராக நிறுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ஜஸ்வந்த் சிங் தான் சுயேட்சையாக போட்டியிட இருப்பதாக அறிவித்தார். ஜஸ்வந்த் சிங்கின் இந்த அதிரடி அறிவிப்பை அடுத்து பல பாஜக மூத்த தலைவர்கள் அவரை சமாதானப் படுத்தும் முயற்சிகளில் இறங்கினர். ஆனால், சொன்னது படியே பார்மர் தொகுதியில் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார் ஜஸ்வந்த் சிங்.
இதனால் கட்சியின் விதிமுறைகளை மீறியதாக நேற்று முந்தினம் ஜஸ்வந்த் சிங்கை கட்சியிலிருந்து நீக்கியது பாஜக. கட்சியின் இந்த அறிவிப்பைக் கேட்டு வேதனை தெரிவித்துள்ளார் ஜஸ்வந்த் சிங். கட்சிக்காக 30 ஆண்டுகளுக்கு மேல் உழைத்த தம்மை தலைமை நடத்திய விதம் மிகவும் மன வேதனையை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஜஸ்வந்த் சிங் கூறியதாவது, ‘தனி நபர் துதி பாடல்கள் அரசியல் கட்சிக்கு அழகல்ல. தனிப்பட்ட நபரின் கைபார்வையாக அரசியல் கட்சி ஒருபோதும் மாறிவிடக்கூடாது. ராஜ்நாத் சிங்கின் இந்த முடிவால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும். சொந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய அந்த பகுதியில் போட்டியிட கேட்டும் மறுத்த பாஜகாவின் முடிவு வேதனை ஏற்படுத்திவிட்டது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 2009ம் ஆண்டு ‘முகமது அலி ஜின்னா'வைப் புகழ்ந்து புத்தகம் எழுதியதற்காக பாஜகவில் இருந்து நீக்கப் பட்டார் ஜஸ்வந்த் சிங். பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் பட்டார். ஆனால், தற்போது இரண்டாவது முறையாக கட்சியிலிருந்து நீக்கப் பட்டுள்ள ஜஸ்வந்த் சிங், இம்முறை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து விலக்கி வைக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications