மறக்கவா முடியுமா?ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் பத்திரிகைகளை வெளியிடுவதையே நிறுத்திய மணிப்பூர்!
ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் பத்திரிகைகளை வெளியிடுவதையே நிறுத்தியிருந்தது மணிப்பூர்.
இம்பால்: ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் மணிப்பூரில் கடந்த ஆண்டு நவம்பரில் சில நாட்கள் பத்திரிகைகளை வெளியிடுவதே நிறுத்தி வைக்கப்பட்ட பேரவலம் அரங்கேறியது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ந் தேதி திடீரென ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்தியா முழுவதுமே அறிவிக்கப்படாத பொருளாதார எமர்ஜென்சியை எதிர்கொள்ள நேரிட்டது.

பரிதவித்த தொழிலாலர்கள்
நாட்டின் அத்தனை மாநிலங்களிலும் ஒவ்வொரு வகையான துயரங்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் தேயிலைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டது.

பத்திரிகைகள் பாதிப்பு
மியான்மர், பூட்டான் எல்லைகளில் இந்திய குடிமக்களே அந்த நாடுகளின் கரன்சியை பயன்படுத்துகிற நிலைமை ஏற்பட்டது. மணிப்பூரிலோ உச்சகட்ட துயரம் ஏற்பட்டது. புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள் அம்மாநிலத்துக்கு சென்றடையவில்லை. இதனால் பத்திரிகைகளுக்கு விளம்பரதாரர்கள் பணம் தர முடியாத நிலை ஏற்பட்டது.

பத்திரிகையார்கள் பாதிப்பு
மணிப்பூரில் பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை மிக மோசமாக உயர்ந்தன. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ300க்கு விற்பனையானது. அதனால் பத்திரிகையாளர்கள் பணி செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

உச்ச துயரம்
ஒருகட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாத பத்திரிகை நிறுவனங்கள், சில நாட்கள் பத்திரிகைகள் வெளியிடுவதை நிறுத்துவதாகவும் அறிவித்தனர். இயல்பு நிலைமை திரும்பும் வரையில் பத்திரிகைகள் வெளிவரவில்லை என்பது ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பின் உச்ச துயரங்களில் ஒன்று.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications