விபத்தில் சிக்கிய தமிழருக்கு சிகிச்சை தர மறுத்தது தவறு: கொல்லம் கமிஷனர் அஜிதா பேகம்
கேரளாவில் விபத்தில் சிக்கிய தமிழக இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொல்லம் கமிஷனர் அஜிதா பேகம் தெரிவித்துள்ளார்.
கொல்லம்: கேரளாவில் விபத்தில் சிக்கிய தமிழக இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொல்லம் கமிஷனர் அஜிதா பேகம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் இளைஞர் முருகன். இவர் நேற்று இரவு 11 மணியளவில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் கொல்லத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

கொல்லத்தில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையில் முருகனுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். முருகனுடன் யாரும் இல்லை என காரணம் கூறி மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கி அபாய கட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு மருத்துவர்கள், மனிதாபிமான முறையில் நடந்து கொண்டது தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் நடந்துகொண்ட அலட்சியம் தமிழரின் உயிரை பறித்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொல்லம் போலீஸ் விசாரணை செய்துவருகிறது. இது தொடர்பாக கொல்லம் போலீஸ் கமிஷனர் அஜிதா பேகம் கூறுகையில், " எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், கோட்டயத்தில் உள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனையிலும், கொல்லத்தில் உள்ள மெடிசிட்டி மற்றும் மெடி டிரினா மருத்துவமனையிலும் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தவறான முன்னுதாரணம். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகங்களிடம் விசாரணை நடத்தப்படும். " என்று தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications