விபத்தில் சிக்கிய தமிழருக்கு சிகிச்சை தர மறுத்தது தவறு: கொல்லம் கமிஷனர் அஜிதா பேகம்
கேரளாவில் விபத்தில் சிக்கிய தமிழக இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொல்லம் கமிஷனர் அஜிதா பேகம் தெரிவித்துள்ளார்.
கொல்லம்: கேரளாவில் விபத்தில் சிக்கிய தமிழக இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொல்லம் கமிஷனர் அஜிதா பேகம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் இளைஞர் முருகன். இவர் நேற்று இரவு 11 மணியளவில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் கொல்லத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

கொல்லத்தில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையில் முருகனுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். முருகனுடன் யாரும் இல்லை என காரணம் கூறி மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கி அபாய கட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு மருத்துவர்கள், மனிதாபிமான முறையில் நடந்து கொண்டது தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் நடந்துகொண்ட அலட்சியம் தமிழரின் உயிரை பறித்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொல்லம் போலீஸ் விசாரணை செய்துவருகிறது. இது தொடர்பாக கொல்லம் போலீஸ் கமிஷனர் அஜிதா பேகம் கூறுகையில், " எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், கோட்டயத்தில் உள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனையிலும், கொல்லத்தில் உள்ள மெடிசிட்டி மற்றும் மெடி டிரினா மருத்துவமனையிலும் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தவறான முன்னுதாரணம். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகங்களிடம் விசாரணை நடத்தப்படும். " என்று தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications