தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமையும்? மத்திய அரசிடம் ஓபிஎஸ் கேள்வி
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று பட்ஜெட் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் வலியுறுத்துகிறார்.
இதே போன்று தமிழகத்தில் மத்திய அரசு அமைக்கப் போவதாக சொன்ன எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையப் போகிறது என்பதை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து அரசு ஆய்வு செய்த நிலையில், இதுவரை எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பதை அறிவிக்காமல் மவுனம் காக்கிறது அரசு.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து அரசு உடனடியாக ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பட்ஜெட் கூட்டத்தில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications