ஊதிய உயர்வை எதிர்பார்த்துள்ளீர்களா?: முதலில் இதைப் படிங்க!
பெங்களூர்: இந்த ஆண்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு 10.5 முதல் 12 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனம் ஊதிய உயர்வு குறித்து நடத்திய ஆய்வின் முடிவு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளது.
அந்த ஆய்வு முடிவின் விவரம் வருமாறு,

ஊதிய உயர்வு
இந்த ஆண்டு ஊதிய உயர்வை எதிர்பார்த்திருக்கும் ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் அதாவது 10.5 முதல் 12 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும். இந்த சதவீதம் பல்வேறு துறை ஊழியர்களுக்கும் பொருந்தும்.

ஊதியம்
வியாபார உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அரசின் சரியான நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதுடன் இந்த ஆண்டு ஊதிய உயர்வின் சதவீதமும் அதிகரித்துள்ளது என்று டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் ரிதுபர்னா சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.

தொலைதொடர்புத் துறை
ரீடெய்ல் மற்றும் தொலைதொடர்புத் துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 12 முதல் 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகம், மின்சாரம், சுகாதாரம், ஃபார்மா, எப்.எம்.சி.ஜி. துறைகள் இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை
அதிக ஊதியம் வழங்கும் நகரமாக மும்பை உள்ளது. ஒன்று அல்ல இரண்டு அல்ல 7 துறைகளில் அதிக ஊதியம் வழங்கும் நகரமாக மும்பை உள்ளது. நான்கு துறைகளில் அதிகம் ஊதியம் வழங்கும் நகரமாக டெல்லியும், ஒரேயொரு துறையில் அதிகம் ஊதியம் வழங்கும் நகரமாக பெங்களூரும் உள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications