கோரக்பூரில் எண்ணற்ற குழந்தைகளின் உயிரைக் காத்த டாக்டர் கான்... குவியும் பாராட்டுக்கள்
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பிஆர்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்து மீதமிருந்த ஏராளமான குழந்தைகளுக்கு பொருத்தி
கோரக்பூர்: உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், சொந்த செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்கி, ஏராளமான குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பிஆர்டி மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்து வந்த தனியார் நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருக்கிறது. இதனால் கடந்த 4-ம் தேதி முதல் ஆக்சிஜன் வழங்குவதை அந்த நிறுவனம் நிறுத்தி, அதிர்ச்சி கொடுத்தது.

கடந்த 10-ம் தேதி இரவு மருத்துவ கல்லூரியின் மைய ஆக்ஸிஜன் பைப் லைனின் எச்சரிக்கை ஒலி நின்று போனது. ஆக்சிஜன் இல்லை என்பதை அது காட்டியுள்ளது. இதனால் 5 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இதே கால கட்டத்தில் ஆபத்துக்கால உதவி சிலிண்டர்களையும் பயன்படுத்தினர் டாக்டர்கள். அது இரண்டு மணி நேரம் மட்டும்தான் தாக்குப்பிடிக்கும் என்பதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மொத்த மருத்துவமனையும் திகைத்துப்போயுள்ளது.
அப்போது மிகத் துணிச்சலாக, விரைந்து முடிவெடுத்து வெளியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்து பல நூறு குழந்தைகளின் உயிரை காப்பாற்றி, பெற்றோர்களுக்கு ஹீரோவாக ஆகியுள்ளார் டாக்டர் கான்.
தடையில்லா ஆக்ஜிஸன் சப்ளை மட்டுமே, மூளை வீக்க நோயால் பாதிக்கப்பட்ட, குழந்தைகள் உயிரைக்காக்கும் என்பதால் மருத்துவர் காபீல் கான் துரிதமாக செயல்பட்டு உள்ளார். இவரின் சமயோசித செயல்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications