அதிகாலையிலேயே ஷாக்.. இமாச்சல பிரதேசத்தை அதிரவைத்த நிலநடுக்கம்.. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலா பகுதியில் இன்று அதிகாலையில் திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் லேசாக குலுங்கி பொருட்கள் உருண்டதால் மக்கள் அலறியடித்து ஓடினார். இது ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவான நிலையில் சேதங்கள் பற்றிய எந்த விபரங்களும் உடனடியாக வெளியாகவில்லை.
இமயமலையையொட்டி அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்று இமாச்சல பிரதேசம். சமீபத்தில் அங்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.

இமயமலையையொட்டி உள்ளதால்இமாச்சல பிரேதசத்தில் பொதுவாக குளிராக உள்ளது. கோடை வாசஸ்தலமாக உள்ளது. தற்போது அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக தர்மசாலா உள்ளது. கிரிக்கெட் மைதானம் இங்கு உள்ளது. தர்மசாலாவில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் சம்பா என்ற பகுதி உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் மக்கள் வீடுகளில் தூங்க சென்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.17 மணியளவில் திடீரென்று சம்பா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் உள்ள பொருட்கள் உருண்டு விழுந்ததால் தூக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்து திறந்த வெளியில் தஞ்சமடைந்தனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சற்று அச்சமடைந்தனர். இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
இதுபற்றி தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறுகையில், ‛‛சம்பா பகுதியில் பிவான நிலநடுக்கம் 3.2 ரிக்டரில் பதிவாகி உள்ளது. பூமிக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வு இருந்த நிலையில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications