உச்சத்தில் கொரோனா... மேற்கு வங்கத்தில் பிரசாரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வாகன பேரணி போன்ற பிரச்சாரங்களுக்குத் தடை உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது வரை மேற்கு வங்கத்தில் ஆறு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரங்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் அரசியல் பேரணிகளில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதது குறித்து வேதனை தெரிவித்த தேர்தல் ஆணையம், அனைத்து விதமான பேரணிகளுக்கும் முழுமையான தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பேரணிகளுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், அது திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுக்கூட்டங்களிலும் 500 பேருக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அனைத்தும் நேற்று இரவு 7 மணிக்கு அமலுக்கு வந்ததாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Recommended Video
முன்னதாக, கொரோனா பரவல் காரணமாகக் கடைசி மூன்று கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும், அந்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications