உச்சத்தில் கொரோனா... மேற்கு வங்கத்தில் பிரசாரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வாகன பேரணி போன்ற பிரச்சாரங்களுக்குத் தடை உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது வரை மேற்கு வங்கத்தில் ஆறு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரங்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் அரசியல் பேரணிகளில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதது குறித்து வேதனை தெரிவித்த தேர்தல் ஆணையம், அனைத்து விதமான பேரணிகளுக்கும் முழுமையான தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பேரணிகளுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், அது திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுக்கூட்டங்களிலும் 500 பேருக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அனைத்தும் நேற்று இரவு 7 மணிக்கு அமலுக்கு வந்ததாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Recommended Video
முன்னதாக, கொரோனா பரவல் காரணமாகக் கடைசி மூன்று கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும், அந்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications