கர்நாடக தேர்தல் தேதி பாஜகவிற்கு கசிந்தது எப்படி?... விசாரணைக்கு ஆணையம் உத்தரவு!
Recommended Video

டெல்லி : கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கும் முன்னரே பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் வெளியிட்ட விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைக்கான காலக்கெடு முடிவதையொட்டி அந்த மாநிலத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இதற்கான சட்டப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா கர்நாடக சட்டசபைக்கு 12-ம் தேதி என்றும்,18ம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் பதிவிட்டார். பின்னர் வாக்கு எண்ணிக்கை தேதியை திருத்தி 15-ம் தேதி என்றும் பதிவிட்டார்.
தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே பாஜகவினருக்கு எப்படி தேர்தல் தேதி தெரிந்தது என்று இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
இதையடுத்து, தேர்தல் தேதி கசிந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத், தேர்தல் தேதி கசிந்தவிவகாரம் மிகவும் தீவிரமானது. இது குறித்து விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், தேர்தல் தேதி முன்கூட்டியே கசிந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இலாகா ரீதியாக விசாரணை நடத்தி ஒருவாரத்துக்குள் அறிக்கை அளிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளையும், பரிந்துரை செய்யும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications