இடிந்து விழும் நிலையில் அரசு கட்டடம்.. பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் ஊழியர்கள்!
பீகாரில் ஆபத்தான நிலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.
பாட்னா: பீகாரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்று இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.
பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அலுவலகத்தின் மேற்கூரையிலிருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் ஸ்லாப்புகள் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது.

அந்த கட்டடம் அபாயகரமானது என்று பீகார் மாநில பொதுப்பணித்துறையினர் கடந்த ஆண்டே அறிவித்தது. இருப்பினும் அலுவலகத்துக்காக மாற்றாக புதிய கட்டடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த கட்டடத்திலேயே வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
வேறு வழியின்றி அங்கு பணிபுரியும் ஊழியர்களும் உயிரை கையிலே பிடித்துக்கொண்டு மிகுந்த அச்சத்துடனே பணிபுரிந்து வருகின்றனர். மேற்கூரையில் இருந்து கற்கள் பெயர்ந்து விழுந்ததில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களை பாதுகாத்துக்கொள்ள தலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு அனைவரும் தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.
அலுவல கட்டடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரிய உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பு அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பீகார் அரசு மாற்று இடம் ஒதுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications