அரசு விளம்பரத்தில் ஜெயலலிதா படம்... கண்காணிப்பு குழு ஏன் அமைக்கவில்லை என உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி : அரசு விளம்பரங்களிள் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படுவதைக் கட்டுப்படுத்த 3 நபர் குழுவை ஏன் நியமிக்கவில்லை என கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
என்.ஜி.ஓ. பொதுநல மனு மையம், தாக்கல் செய்திருந்த மனுவில் அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகத்தின் அதிமுக கட்சியும், டெல்லியின் ஆம் ஆத்மி கட்சியும், மீறியுள்ளது என்றும், இதனால் இந்த இருகட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும் என்று முறையிட்டிருந்தது.

இந்த மனு நேற்று நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் என்.வி.ரமணா அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, என்.ஜி.ஓ. சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் டெல்லி அரசும் தமிழக அரசும் உச்ச நீதிமன்ற விதிமுறைகளை தெளிவாகவும் நேரடியாகவும் மீறியுள்ளன என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் துவேதி எதிர்த்த போது, கோபமடைந்த நீதிபதிகள், "நாங்கள் இன்னமும் நோட்டீஸ் அனுப்பாதபோது எங்களை எதற்காக தூண்டுகிறீர்கள்?" என்று கோபமாகக் குறுக்கிட்டனர்.
3 நபர் குழு மட்டுமே இதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும், 3 நபர் கட்டுப்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே இப்போது கேள்வி என்று நீதிபதிகள் கூற அதற்கு பிரசாந்த் பூஷன், "அந்தக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு அவதூறு வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் இல்லை" என்பதை சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து, நீதிபதிகள் எங்களது உத்தரவைப் பின்பற்றி 3 நபர் குழு நிறுவப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதற்கு பதில் அளிக்குமாறும் நிறுவப்படவில்லையெனில் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதற்கான விளக்கங்களைக் கேட்டும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பில், அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி நீங்கலாக, கட்சித் தலைவர்களின் படங்கள் வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
மேலும், இதனைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மத்திய அரசு 3 நபர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications