கருத்தை வெளிப்படுத்த வன்முறை வழி கிடையாது: அருண் ஜேட்லி எச்சரிக்கை
டெல்லி: நாட்டில் நடைபெறும் சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, கருத்துக்களை வெளிப்படுத்த வன்முறையற்ற வழிகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு எதிரான தாக்குதல், பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்புள்ளோருக்கு எதிரான தாக்குதல் என நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆளும் தரப்பில் இருந்து வலிமையான குரல் வராதது, இந்த சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு ஊக்கம் தருகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று கூறியதாவது: தங்கள் கருத்தை வன்முறையின் வழியாக தெரிவிப்பது அதிருப்தியளிக்கிறது. இதுபோன்ற வன்முறைகள் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்படுகிறது. இதை பார்த்து, ஊக்கம் பெறும் மேலும் பலரும் வன்முறையை தொடருகிறார்கள்.
வலதுசாரி அமைப்புகள் இதுபோன்ற வன்முறையாளர்களிடமிருந்து தங்களை விலக்கியே வைத்திருக்க வேண்டும். சில விவகாரங்கள் மிகவும் மோசமாக உள்ளன. சில விஷயங்கள், மதங்களுக்கு நடுவே, பிளவை உருவாக்கிவிடும். ஜம்மு காஷ்மீர் போன்ற பதற்றமான பகுதிகளிலும் இது எதிரொலித்துவிடும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications