டெல்லி பிரதமர் அலுவலக அறையில் திடீர் தீவிபத்து.. !
டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டதால் பெரிய அளவில் சேதம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் செளத் பிளாக்கில் பிரதமரின் அலுவலகம் உள்ளது. இங்குள்ள அறை ஒன்றில் இன்று அதிகாலை 3. 30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. 20 நிமிடத்தில் தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட ஆய்வின்படி பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.
#Delhi: Fire broke out in Room No. 242, located on the second floor of Prime Minister's Office around 3.35 AM. Situation now under control. pic.twitter.com/9dW5bVLsNI
— ANI (@ANI) October 17, 2017
பிரதமர் அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள 242ம் எண் அறையில்தான் தீவிபத்து ஏற்பட்டது.