பெங்களூர் பாரில் பயங்கர தீ.. 5 பேர் பலி
பெங்களூரில் இருக்கும் கைலாஷ் பார் என்னும் ஹோட்டலில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் கைலாஷ் பார் என்னும் ஹோட்டலில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதிகாலையிலேயே விபத்து ஏற்பட்டதால் தீ வேகமாக பரவி இருக்கிறது.
இந்த தீயை கட்டுப்படுத்த தீ அணைப்பு வீரர்கள் அதிக சிரமப்பட்டு இருக்கிறார்கள். ஹோட்டல் பார் என்பதால் ஆபத்தும் அதிகமாக இருந்துள்ளது.
5 பேர் இதில் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இவர்கள் அந்த ஹோட்டலில் வேலை பார்த்த பணியாளர்கள் ஆவர்.

கைலாஷ் பார்
பெங்களூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கலாசிபாளையம் என்ற பகுதியில் இருக்கும் கைலாஷ் பாரில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அதிகாலை 2.30 மணிக்கு சரியாக தீ பிடித்து எரிந்து இருக்கிறது. இந்த பார் அங்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு மிக அருகில் உள்ளது.

தீ அணைப்பு
3 மணி நேரமாக கஷ்டப்பட்டு தீ அணைப்பு வீரர்கள் இந்த தீயை கட்டுப்படுத்தினார்கள். அங்கு மார்க்கெட்டில் காய்கறி இறக்கிய நபர்கள் இந்த தீயை பார்த்து தகவல் அளித்து இருக்கிறார்கள். மதுக்கடை என்பதால் தீயை அணைப்பது கஷ்டமானதாக இருந்துள்ளது.

5 பேர் மரணம்
இந்த தீ விபத்தில் அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஐந்து பேர் மரணம் அடைந்தனர். அதில் ஒருவர் பெண். சுவாமி, பிரசாத், மஞ்சுநாத், கீர்த்தி, மகேஷ் ஆகியோர் மரணம் அடைந்ததாக அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இவர்கள் அந்த பாரில் வேலை பார்த்து வரும் பணியாளர்கள் ஆவர்.

என்ன காரணம்
இதில் காயம் அடைந்த அனைவரும் பெங்களூரில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த விபத்திற்கு இதுவரை சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications