பெங்களூர் பாரில் பயங்கர தீ.. 5 பேர் பலி
பெங்களூரில் இருக்கும் கைலாஷ் பார் என்னும் ஹோட்டலில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் கைலாஷ் பார் என்னும் ஹோட்டலில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதிகாலையிலேயே விபத்து ஏற்பட்டதால் தீ வேகமாக பரவி இருக்கிறது.
இந்த தீயை கட்டுப்படுத்த தீ அணைப்பு வீரர்கள் அதிக சிரமப்பட்டு இருக்கிறார்கள். ஹோட்டல் பார் என்பதால் ஆபத்தும் அதிகமாக இருந்துள்ளது.
5 பேர் இதில் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இவர்கள் அந்த ஹோட்டலில் வேலை பார்த்த பணியாளர்கள் ஆவர்.

கைலாஷ் பார்
பெங்களூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கலாசிபாளையம் என்ற பகுதியில் இருக்கும் கைலாஷ் பாரில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அதிகாலை 2.30 மணிக்கு சரியாக தீ பிடித்து எரிந்து இருக்கிறது. இந்த பார் அங்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு மிக அருகில் உள்ளது.

தீ அணைப்பு
3 மணி நேரமாக கஷ்டப்பட்டு தீ அணைப்பு வீரர்கள் இந்த தீயை கட்டுப்படுத்தினார்கள். அங்கு மார்க்கெட்டில் காய்கறி இறக்கிய நபர்கள் இந்த தீயை பார்த்து தகவல் அளித்து இருக்கிறார்கள். மதுக்கடை என்பதால் தீயை அணைப்பது கஷ்டமானதாக இருந்துள்ளது.

5 பேர் மரணம்
இந்த தீ விபத்தில் அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஐந்து பேர் மரணம் அடைந்தனர். அதில் ஒருவர் பெண். சுவாமி, பிரசாத், மஞ்சுநாத், கீர்த்தி, மகேஷ் ஆகியோர் மரணம் அடைந்ததாக அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இவர்கள் அந்த பாரில் வேலை பார்த்து வரும் பணியாளர்கள் ஆவர்.

என்ன காரணம்
இதில் காயம் அடைந்த அனைவரும் பெங்களூரில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த விபத்திற்கு இதுவரை சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications