அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூருக்கு வெள்ள அபாயம்.. கர்நாடக வானிலை மையம் எச்சரிக்கை
பெங்களூரில் அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என கர்நாடக மாநில வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video

பெங்களூரு: அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என கர்நாடக மாநில வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் வெப்ப சலனம் காரணமாகவும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் தமிழகத்தின் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம்
நேற்று முன்தினம் பெங்களூரு பகுதியில் கொட்டிய கனமழையால் சுவர் இடிந்ததில் 25 வயது இளைஞர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.

கண்காணிப்பு மையம் எச்சரிக்கை
இந்நிலையில் பெங்களூருவில் அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ள பெருக்கு ஆபத்து உள்ளதாக அம்மாநில வானிலை மையம் மற்றும் கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.

கடுமையாக பாதிக்கப்படும்
பெங்களூருவின் தாழ்வானப் பகுதிகளான ராஜராஜேஸ்வரி நகர், கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மகாதேவபுரா மற்றும் பொம்மனஹல்லி ஆகிய ஐந்து பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை எச்சரிக்கை
மேலும் ஜூன் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நாள்தோறும் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழை பெய்யும் என்றும் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தின் 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடிகாலில் அடித்து செல்லப்பட்டார்
இதனிடையே மழை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். சனிக்கிழமை கொட்டிய பலத்த மழையல் இம்ரான் நடாப் என்பவர் புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள வடிகாலில் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பத்திரமாக இருங்க மக்களே
பெங்களூர் கடந்த காலங்களில் பல வெள்ளங்களைச் சந்தித்துள்ள நகரம்தான். இருப்பினும் முன்னெச்சரிக்கை முக்கியம்.. எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பெங்களூர் மழை, வெள்ள நிலவரம் குறித்த உடனுக்குடன் நமது இணையதளத்தில் அறியலாம்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications