சர்ச்சையில் சிக்கிய 251 ரூபாய் ஸ்மார்ட் போன்...டெலிவரி தேதி அறிவிப்பு !
டெல்லி: உலகின் மிகக்குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன் என்ற அறிமுகத்தோடு வெளியான ரிங்கிங் பெல் நிறுவன செல்போன்கள் ஜூன் 28ம் தேதி முதல் டெலிவரி செய்யப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ப்ரீடம் 251 என்ற பில்டப்போடு ரிங்கிங் பெல் என்ற நொய்டாவை சேர்ந்த நிறுவனம், ரூ.251க்கு ஸ்மார்ட் போன் தருவதாக அறிவித்தது. இந்த போனிற்கான முன்பதிவு, கடந்த பிப்ரவரி 17ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த குறைந்தவிலை ஸ்மார்ட்போனுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருந்தது.

ஆன்ட்ராய்டு 5.1 இயங்குதளம் கொண்ட ப்ரீடம் 251 செல்போன் 4 இன்ச் க்யூஎச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே இருக்கும். 3.2 மெகா பிக்ஸல் ஆட்டோ போகஸ் கேமரா, 0.3 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, 1.3 ஜிஎச்இச் குவாட் கோர் பிராசர், 1ஜிபி ராம், 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (எஸ்டி கார்ட் சப்போர்ட்டுடன்), 1450 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் ஓஎஸ் என கலக்கலான அம்சங்களுடன் விற்பனை செய்யப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
ப்ரீடம் 251 செல்போனின் விளம்பரங்கள் நாடு முழுவதும் பெரிதும் கவனம் பெற்றதுடன் ஒரேநாளில் 30,000 பேர் செல்போனுக்கு பணம் செலுத்தி பதிவு செய்தனர். மொத்தம் 7 கோடி பேர் ப்ரீடம் 251 செல்போன்களுக்கு பதிவு செய்துள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. மொத்தமாக புக் செய்ய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டியதால், முன்பதிவு நடைபெற்ற நாட்களில் அந்த நிறுவனத்தின் வெப்சைட்டே ஜாம் ஆனது.
இதனிடையே, பல்வேறு பிரச்சினைகளால் பணம் செலுத்தியோருக்கு பணத்தை ப்ரீடம் 251 திரும்ப அளித்தது. ரூ.2,400 மதிப்பிலான ஆன்ட்ராய்டு செல்போனை ரூ.251-க்கு வழங்குவதாகக் கூறி முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி அந்த நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான, வழக்கு நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டபடி, ஜூன் மாதம் முதல்கட்ட விற்பனை தொடங்கும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவன இயக்குநர் மொயித் கோயல் தெரிவித்துள்ளார்.
வரும் 28ம் தேதி முதல் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பதிவு செய்தவர்களுக்கு செல்போன்களை வினியோகம் செய்ய உள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பதிவு செய்துள்ள 7 கோடி பேரில் பதிவு அடிப்படையில் 25 லட்சம் பேர்களுக்கு முதல்கட்டமாக செல்போன்கள் ஷிப்பிங் செய்யப்பட்டு டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications