கவுரி லங்கேஷை போல இன்னொரு எழுத்தாளரையும் கொல்ல பணம் தந்தனர்: இந்துத்துவா தீவிரவாதி வாக்குமூலம்
கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளி அடுத்து இன்னொரு எழுத்தாளரையும் கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளி அடுத்து இன்னொரு எழுத்தாளரையும் கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் ''பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் நடு சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் முக்கியமான குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

முக்கியமானவர்
சில நாட்களுக்கு முன்பு இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார். இதில் இவர்தான் முக்கிய குற்றவாளி என்று போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

அடுத்தது
இந்த நிலையில் கே டி நவீன் குமார் முக்கியமான வாக்குமூலம் ஒன்று கொடுத்து இருக்கிறார். இவர் முதல் கொலை மிகவும் கச்சிதமாக செய்த காரணத்தால் அடுத்த கொலைக்கும் இவருக்கும் பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பணம் கொடுத்தது யார் என்று இன்னும் போலீஸ் தெரிவிக்கவில்லை.

யாரை கொலை செய்ய
கவுரி லங்கேஷுக்கு அடுத்து இவர்கள் குறித்து வைத்து இருந்தது கேஎஸ் பகவான் என்ற எழுத்தாளர். பகுத்தறிவாதியான இவர் இந்துத்துவா அமைப்புகளுக்கு பெரிய சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். இதனால் இவரை எப்படி கொலை செய்ய வேண்டும் என்று நவீனுக்கு உத்தரவு சென்று இருக்கிறது.

அப்போதுதான் மாட்டினார்
இவரை கொலை செய்ய துப்பாக்கி, குண்டுகள் வாங்க சென்ற போதுதான் நவீன் போலீசால் கைது செய்யபட்டார். இவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட இருக்கிறது. இதனால் பல முக்கியமான தலைகள் கர்நாடகாவில் கைதாக வாய்ப்புள்ளது.
-
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications