கதையில் ட்விஸ்ட்.. ஜி.எஸ்.டி வாக்கெடுப்பை அதிமுக புறக்கணித்ததே மத்திய அரசுக்கு உதவத்தானா?
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை எதிர்த்தாலும், அதன் மீது வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்ததன் மூலம், மத்திய அரசுக்கு, அதிமுக மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே கருதுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஜி.எஸ்.டி எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாவை, நேற்று முன்தினம், ராஜ்யசபாவில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகம் செய்தார்.
உறுப்பினர்களின் 7 மணி நேர விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆதரவாக 203 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து ஒரு வாக்கும் கிடைக்கவில்லை. ஏனெனில் மசோதாவை எதிர்த்த ஒரே கட்சியான அதிமுக வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்திருந்தது.

எதிர்த்த அதிமுக
முன்னதாக விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், மாநில வரி விதிப்பு சுதந்திரத்தை இந்த மசோதா நசுக்குவதாகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மசோதா என்றும், கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.

எதிர்த்து வாக்கு
மேலும், சில திருத்தங்களை முன் வைத்து அதை மசோதாவில் சேர்க்க கோரினார். ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை. நவநீதகிருஷ்ணன் பேசியதை பார்த்தால், வாக்கெடுப்பில் அதிமுக எதிர்த்து வாக்களிக்கும் என்றுதான் நினைக்க தோன்றியது.

வெளிநடப்பு
ஆனால், விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில், பங்கேற்காமல் நவநீதகிருஷ்ணனும் பிற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

12 எம்.பிக்கள்
நாடாளுமன்றத்தில் மொத்தம் 50 எம்.பி.க்களை கொண்டிருந்தது அதிமுக. லோக்சபாவில் 37; ராஜ்யசபாவில் 13 எம்.பிக்கள் இருந்தனர். சசிகலா புஷ்பா சமீபத்தில்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பதால் தற்போது ராஜ்யசபாவில் அக்கட்சி பலம் 12 எம்.பிக்களாக உள்ளது.

ஏக மனது
அதிமுகவின் 12 எம்.பிக்களும் எதிர்த்து வாக்களித்திருந்தால், 191 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 12 வாக்குகள் எதிராகவும் கிடைத்திருக்கும். ஆனால், இப்போதோ, ஏக மனதாக மசோதா நிறைவேறியதாக கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

மாற்ற முடியாதுல்ல
"கடந்த 2 வருடங்களாகவே, ஜி.எஸ்.டி மசோதாவை அதிமுக எதிர்த்து வருகிறது. எனவே திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி ஆதரவு தெரிவிக்க முடியாது என்பதால்தான், 'மறைமுக ஆதரவாக' அக்கட்சி வெளிநடப்பு செய்துவிட்டது" என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத அரசியல் விமர்சகர் ஒருவர்.

தமிழகத்திற்கு சில நன்மை
பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் கூறுகையில், அரசியல் வகையிலான ஆதரவு என்பதைவிட, பொருளாதார ரீதியில் தமிழகத்திற்கு சேவை வரி வருவாய் அதிகம் கிடைக்கும் என்பதே அதிமுகவின் வெளிநடப்புக்கு காரணமாக இருந்திருக்கும். எதிர்த்து வாக்களித்தாலும் மசோதாவை நிறைவேறாமல் தடுத்திருக்க முடியாது என்கிறார்.

தேவையில்லங்க
அதிமுக எம்.எல்.ஏ, மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், தனது முடிவை மாற்றிக்கொண்டு, ஜி.எஸ்.டி மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க காரணம் கார்பொரேட்டுகளின் நலன். ஆனால், அதிமுகவுக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை என்பதால் மாநில நலனுக்காக எதிர்த்தோம். வெளிநடப்பு செய்தோம் என்றார்.

நடுநிலை
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், அதிமுக ஆதரவு மற்றும் எதிர்ப்பற்ற நடுநிலையை எடுத்துள்ளதாக நினைக்கிறேன். பாஜக அரசுக்கு அவர்கள் உதவியதாக கருதவில்லை என்றார்.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications