ஐஏஎஸ் அதிகாரி மகளைக் கடத்த முயற்சி.. பாஜக தலைவர் மகன் கைது.. ஹரியானாவில் பரபரப்பு
ஐஏஎஸ் அதிகாரி மகளைக் கடத்த முயன்ற வழக்கில் ஹரியானா மாநில பாஜக தலைவர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகார்: ஹரியானா மாநில ஐஏஎஸ் அதிகாரியின் மகளைக் கடத்த முயன்ற வழக்கில் பாஜக தலைவர் மகன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருபவரின் மகளை, கடந்த வெள்ளிக் கிழமை அன்று ஹரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் என்பவரும், அவரது நண்பர் ஆசிஷ் என்பவரும் பின் தொடர்ந்தனர். மேலும், அவரைத் தொல்லை செய்து கடத்தவும் முயற்சி செய்தனர். இதனை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, பாஜகவின் அழுத்தத்தால் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஹரியானாவில் ஏற்படுத்தியது. மேலும், பெண்ணைக் கடத்த முயன்ற இருவரையும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது குறித்து அம்மாநில மகளிர் ஆணையம் கேள்வி கேட்டு பிரச்சனையை கையில் எடுத்தது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, இந்த வழக்கில் முறையாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடாப் போவதாக எச்சரித்தார். இந்தக் கடத்தலில் பாஜக தலைவர் மகன் ஈடுபட்டுள்ளதால், இதனை மறைக்கவே போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கடத்தல் முயற்சி எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், சண்டிகர் போலீசாரோ, கடத்தல் முயற்சியின் கீழ் வழக்கைப் பதிவு செய்யாமல், பெண்ணைப் பின்தொடர்தல் மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனை அம்மாநில காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டித்தன.
இதனால் திணறிப் போன போலீசார், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் போலீசில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனாலும், பாஜக தலைவர் மகன் என்ற கெத்தில் ஆஜராகாமல் விகாஸ் மற்றும் ஆசிஷ் போக்கு காட்டி வந்தனர். போலீசார் விதித்த காலக்கெடு முடிந்து 3 மணி நேரம் கடந்த நிலையில் வேறு வழியில்லாமல் அவர்கள் இருவரும் போலீசார் முன் ஆஜரானார்கள்.
இதனையடுத்து, இவரும் இளம்பெண்ணைக் கடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 365 மற்றும் 511-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் நாளைக் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications