பலாத்காரம் செய்வதாக மிரட்டுறாங்க.. கதறும் முகமது ஷமி மனைவி.. பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு
கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹானின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் நகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான். சில வருடங்களாகவே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஷமி பற்றி அடுக்கடுக்காக புகார்களை கூறினார் ஹசின்.
இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே பிரிந்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில், அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜைக்காக அனைத்து ஹிந்துக்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்று சமூக வலைத்தளத்தில் ஹசின் ஜகான் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அவரின் இந்த பதிவிற்கு தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கொலை செய்து விடுவோம், பாலியல் பலாத்காரம் செய்வோம் என்றும் மோசமான முறையில் அவருக்கு மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி ஆகஸ்ட் 9ம் தேதி ஹசின் ஜகான் புகார் அளித்தார்.

எதிர்காலம்
இருப்பினும் பாதுகாப்பு இல்லை என கூறி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடினார். தனது மனுவில் அவர் கூறுகையில், இந்து சகோதர, சகோதரிகளை வாழ்த்தியதற்காக சிலர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். என்னால், எதுவும் செய்ய முடியாத நிலையில், என் மகள்களின் எதிர்காலத்தை எண்ணி கவலையில் இருக்கிறேன்.

தாக்குதல்கள்
சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறேன். பாதுகாப்பற்ற நிலையில் தான் இருப்பதாக உணர்கிறேன். இது தொடர்ந்தால் மனதளவில் அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவேன். என் மகள்களுடன் தனியாக வாழ்கிறேன். பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், ஒவ்வொரு நொடியும் எனக்கு கெட்ட கனவாக உள்ளது. எனவே நீதிமன்றம் விரைந்து எனது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

பாதுகாப்பு வழங்க உத்தரவு
இந்த வழக்கு இன்று நீதிபதி டெபாங்சு பாசக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையினர் புகாரை எஃப்.ஐ.ஆராக பதிவு செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமிதேஷ் பானர்ஜி தெரிவித்தார். இரு தரப்பினரையும் விசாரித்த பின்னர், நீதிபதி டெபாங்சு பாசக் தனது உத்தரவில், மனுதாரருக்கு அவரது வாழ்க்கைக்கும், சொத்துகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

ஐபிஎல் அணி
மனுதாரர் அளித்த, புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த விவகாரம் நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வரும், அப்போது காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷமி தற்போது, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications