பலாத்காரம் செய்வதாக மிரட்டுறாங்க.. கதறும் முகமது ஷமி மனைவி.. பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு
கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹானின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் நகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான். சில வருடங்களாகவே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஷமி பற்றி அடுக்கடுக்காக புகார்களை கூறினார் ஹசின்.
இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே பிரிந்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில், அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜைக்காக அனைத்து ஹிந்துக்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்று சமூக வலைத்தளத்தில் ஹசின் ஜகான் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அவரின் இந்த பதிவிற்கு தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கொலை செய்து விடுவோம், பாலியல் பலாத்காரம் செய்வோம் என்றும் மோசமான முறையில் அவருக்கு மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி ஆகஸ்ட் 9ம் தேதி ஹசின் ஜகான் புகார் அளித்தார்.

எதிர்காலம்
இருப்பினும் பாதுகாப்பு இல்லை என கூறி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடினார். தனது மனுவில் அவர் கூறுகையில், இந்து சகோதர, சகோதரிகளை வாழ்த்தியதற்காக சிலர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். என்னால், எதுவும் செய்ய முடியாத நிலையில், என் மகள்களின் எதிர்காலத்தை எண்ணி கவலையில் இருக்கிறேன்.

தாக்குதல்கள்
சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறேன். பாதுகாப்பற்ற நிலையில் தான் இருப்பதாக உணர்கிறேன். இது தொடர்ந்தால் மனதளவில் அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவேன். என் மகள்களுடன் தனியாக வாழ்கிறேன். பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், ஒவ்வொரு நொடியும் எனக்கு கெட்ட கனவாக உள்ளது. எனவே நீதிமன்றம் விரைந்து எனது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

பாதுகாப்பு வழங்க உத்தரவு
இந்த வழக்கு இன்று நீதிபதி டெபாங்சு பாசக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையினர் புகாரை எஃப்.ஐ.ஆராக பதிவு செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமிதேஷ் பானர்ஜி தெரிவித்தார். இரு தரப்பினரையும் விசாரித்த பின்னர், நீதிபதி டெபாங்சு பாசக் தனது உத்தரவில், மனுதாரருக்கு அவரது வாழ்க்கைக்கும், சொத்துகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

ஐபிஎல் அணி
மனுதாரர் அளித்த, புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த விவகாரம் நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வரும், அப்போது காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷமி தற்போது, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications