செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் ரூ. 10000 அபராதம்- லோக்சபாவில் மசோதா தாக்கல்
செல்லாத பழைய ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பவர்களுக்கு தண்டனை அளிக்க வகைச் செய்யும் மசோதாவை மத்திய அரசு வெள்ளிக்கிழமை லோக்சபாவில் தாக்கல் செய்தது.
டெல்லி: கள்ள நோட்டு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்குடன் உயர் மதிப்புடைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக கடந்த நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனையடுத்து சில்லறை நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கியில் இருந்து பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செல்லாத ரூபாய் நோட்டுகளை 10க்கு மேல் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தை நிரந்தர சட்டமாக மாற்றும் வகையில், லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மசோதா ஒன்றை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவில், நிதி கட்டமைப்பில் புழக்கத்தில் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள், கருப்பு பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்கு ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது என்ற முடிவை மத்திய அரசு எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு, செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கையிருப்பில் வைத்திருத்தல், புழக்கத்தில் விடுதல், வாங்குதலுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி, படிப்பு போன்றவற்றுக்காக பழைய நோட்டுகளை வைத்திருக்க விரும்புவோர் மட்டும் 25 எண்ணிக்கையில் அத்தகைய நோட்டுகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், செல்லாத ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை பத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்களிடம் இருக்கும் நோட்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம், இந்த 2 தொகைகளில் எது அதிகமாக உள்ளதோ, அது அபராதமாக விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications