செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் ரூ. 10000 அபராதம்- லோக்சபாவில் மசோதா தாக்கல்
செல்லாத பழைய ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பவர்களுக்கு தண்டனை அளிக்க வகைச் செய்யும் மசோதாவை மத்திய அரசு வெள்ளிக்கிழமை லோக்சபாவில் தாக்கல் செய்தது.
டெல்லி: கள்ள நோட்டு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்குடன் உயர் மதிப்புடைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக கடந்த நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனையடுத்து சில்லறை நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கியில் இருந்து பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செல்லாத ரூபாய் நோட்டுகளை 10க்கு மேல் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தை நிரந்தர சட்டமாக மாற்றும் வகையில், லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மசோதா ஒன்றை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவில், நிதி கட்டமைப்பில் புழக்கத்தில் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள், கருப்பு பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்கு ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது என்ற முடிவை மத்திய அரசு எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு, செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கையிருப்பில் வைத்திருத்தல், புழக்கத்தில் விடுதல், வாங்குதலுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி, படிப்பு போன்றவற்றுக்காக பழைய நோட்டுகளை வைத்திருக்க விரும்புவோர் மட்டும் 25 எண்ணிக்கையில் அத்தகைய நோட்டுகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், செல்லாத ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை பத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்களிடம் இருக்கும் நோட்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம், இந்த 2 தொகைகளில் எது அதிகமாக உள்ளதோ, அது அபராதமாக விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications