வருமான வரித்துறை நடவடிக்கையால் உங்கள் பான்கார்டு ரத்தாகியுள்ளதா? கண்டுபிடிக்க இதுதான் வழி
டெல்லி: இந்தியாவில் சுமார் 11 லட்சம் போலியான பான் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் இதை உறுதி செய்தார்.
இந்தியாவில் போலியான மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை ஒருவர் வைத்திருப்பது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு, 11,44,211 பான் அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ராஜ்யசபாவில் சந்தோஷ் கங்க்வார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருக்கக் கூடாது என்பது விதிமுறை. ஒருவேளை அவ்வாறு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வருமான வரிச் சட்டம் 272பியின் படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தால், அதனை அவரே அரசிடம் திருப்பி அளித்திட வேண்டும்.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இப்படி போலிகளை கண்டறியத்தான். இம்மாத இறுதிக்குள் இதை செய்ய வேண்டும். இந்த நிலையில், போலி என்று கருதி உங்கள் பான் எண்ணையும் தவறுதலாக வருமான வரித்துறை ரத்து செய்துவிட்டதா இல்லையா என்பதை அறிய ஒரு வழி உள்ளது.
http://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று அதை அறியலாம். அந்த வெப்சைட்டில் services என்ற பிரிவில் 'Know Your PAN' என்பதை கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் தகவல்களை அளிக்க வேண்டும்.
பான் அட்டை வாங்குவதற்காக நீங்கள் கொடுத்த செல்போன் எண்ணை இதில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, சமர்ப்பித்ததும் செய்ததும், உங்கள் செல்பேன் எண்ணுக்கு ஓடிபி பாஸ்வேர்ட் எண் அனுப்பப்படும். அதையும் பதிவு செய்த பிறகு வேலிடேட் என்ற பட்டனை கிளிக் செய்யவும். இறுதியில், உங்கள் பான் அட்டையின் எண் மற்றும் அதன் அருகே ஆக்டிப் அல்லது நாட் ஆக்டிவ் என்று பதிவு செய்யப்பட்டிருக்கும். அதைக் கொண்டு உங்கள் பான் அட்டையின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications