நிஜாமாபாத் தொகுதி வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்.? சைலன்ட் மோடில் தேர்தல் ஆணையம்
நிஜாமாபாத்: மே 23 அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை இது பற்றி எதுவும் கூறவில்லை என நிஜாமாபாத் மாவட்ட வருவாய் அலுவலர் அஞ்சியா கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவை தொகுதி தான் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ளது 185 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இத்தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 11ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆனால் இத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் கிடைக்கவில்லை என தெரிகிறது. 185 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் நிஜாமாபாத் தொகுதியில் நாட்டில் முதல் முறையாக, M3 பதிப்பு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்களிக்க பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் நிஜாமாபாத் மக்களவை தொகுதியின் இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு, சுமார் 36 மணி நேரம் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில், 14 முதல் 36 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்படும் முழு வாக்கு எண்ணிக்கையும் பொதுவாக 8-10 சுற்றுகளில் முடிந்துவிடும்.
ஆனால் நிஜாமாபாத் தொகுதியில் போட்டயிட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, வாக்கு எண்ணிக்கை முடிவடைய மிக நீண்ட நேரம் ஆகும் என்றே தெரிகிறது. இது பற்றி பேசிய நிஜாமாபாத் மாவட்ட வருவாய் அலுவலர் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளுக்காக காத்திருப்பதாக கூறினார்.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவிலும், அனைத்து வேட்பாளர்களின் வாக்கு விவரங்களும் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். ஆனால் 185 வேட்பாளர்களளுக்கு பதிவான வாக்குகளை சரிபார்க்கும் பணி மிகவும் கடினமானது தான் என குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மேஜையிலும் இருவர் பணியமர்த்தப்பட்டு வாக்கு எண்ணிக்கையை சரி பார்ப்பார்கள் என்றார்.
சாதாரண சூழலில் வேட்பாளர்களுக்கு பதிவான ஓட்டுகளை காட்சிப்படுத்துவதும், பதிவேட்டில் பதிவு செய்வதும் விரைவாக செய்யப்படும். ஆனால் நிஜாமாபாத் தொகுதியில் அது சாத்தியமில்லை என்றார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளின் படி செயல்பட்டு கூடுதல் பணியாளர்கள் மற்றும் மேஜைகள் அமைக்கப்பட்டால், வாக்குகளை ஓரளவிற்காவது விரைவாக எண்ணி முடிப்பது சாத்தியம் என அதிகாரி அஞ்சியா கூறியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications